districts

img

வீரபாண்டி மாரியம்மன் கோவில் கம்பம் நடும் விழா

தேனி, ஏப்.19- வீரபாண்டி கௌமாரி யம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் தொடக்க நிகழ்வான கம்பம் நடும்  நிகழ்ச்சியில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்  டனர். ஆண்டு தோறும் நடை பெறும் வீரபாண்டி கௌ மாரியம்மன் கோயில் இந்த  ஆண்டு மே 9 இல் தொடங்கி  16 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது.இதற்கு முன்  னோட்டமாக கம்பம் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடை பெற்றது. இதற்காக கோயில் வீட்டில் இருந்து அம்மன் பவனி வந்து கோயிலை வந்  தடைந்தார். முல்லைப் பெரியாற்றில் திருக்கம்பத்திற்கு அபி ஷேகம் செய்யப்பட்டு மஞ் சள்பூசி, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் சூழ  ஊர்வலமாக எடுத்து வரப் பட்டது. பின்பு கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு  வழிபாடுகள் செய்து கம்பம் நடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்  தர்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி  கங்கணம் கட்டி விரதத்தை தொடங்கினர். மே 9-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மலர் விமானம், சிம்ம வாக னம், முத்துப்பல்லக்கு, புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடை பெறும். திருவிழாவின் முக்  கிய நிகழ்வான தேரோட்டம் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.