தேனி, ஏப்.28- தேனி மாவட்டத்தில் வன விவ சாயிகள் வெளியேற்றம், மலை மாடுகள் மேய்ச்சலுக்கு நீதிமன் றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்ச ரும், தேனி மாவட்ட பொறுப்பா ளருமான ஐ.பெரியசாமியிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் பொதுச் செயலாளர் பெ. சண்முகம் கோரிக்கை மனு வழங்கினார் . வைகை அணையில் தமிழக கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரிய சாமியை சந்தித்த பெ.சண்முகம், கடமலை மயிலை ஒன்றியத்தில் வன விவசாயிகளை ஆக்கிரமிப் பாளர்கள் என கூறி தனிநபர் தொடுத்த வழக்கில் 4 மாதத்தில் அவர்களை சிறப்பு காவல் படை அமைத்து வெளியேற்ற வேண் டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் 8 ஊராட்சிகளை சேர்ந்த 96 கிரா மங்களில் குடியிருக்கும் ஆயி ரக்கணக்கான மக்கள் பாதிக்கப் படும் நிலை ஏற்படும். மேலும் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 25 ஆயிரம் வன விவசாயிகள், மலை மாடுகள், நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய தமிழக முதல் வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்வின் போது திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் தங்க. தமிழ்ச்செல்வன், கம்பம் ராம கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, விவசாயிகள் சங்க மாநி லக்குழு உறுப்பினர் கே.ராஜப் பன், மாவட்ட செயலாளர் டி. கண்ணன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.