districts

img

மேம்பாலங்களால் வண்டியூர், தென்கால் கண்மாய்க்கு பாதிப்பு ஏற்படாது; அரசு உறுதி

மதுரை, பிப்.23-  வண்டியூர் மற்றும் தென்கால் கண்மாயில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், மேம்பால பணிகளால் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி யளிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.  

அந்த மனுவில், ‘‘மதுரை தென்கால் கண்மாயில் ரூ.200 கோடியில் விளாச் சேரி மெயின் ரோட்டில் இருந்து மதுரை- திருமங்கலம் பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டப்படுகிறது.  இதே போல வண்டியூர் கண்மாய் பகுதியில் அண்ணா பேருந்து நிலை யத்தில் இருந்து கோமதிபுரம் பெட்ரோல் நிலையம் வரை 2.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.150.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது.  

இந்த இரண்டு மேம்பால திட்டங்களினால் மதுரையின் மிகப் பெரிய நீர்த் தேக்கமான இரண்டு கண்மாய்களும் முற்றிலும் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே வண்டியூர் மற்றும் தென்கால் கண்மாயில் மேம்பா லம் கட்ட தடை விதிக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணை செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.  

இந்நிலையில் இந்த மனுக்கள் மீண்டும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறி ஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மதுரை யில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்றே இந்த பாலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது.  

இந்தத் திட்டத்தால் எந்த விதத்திலும் வண்டியூர் தென்கால் கண்மாய் பாதிக்கப் படாது. அதற்கு மாறாக அதன் கொள்ளளவு மேலும் அதிகரிக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை தேதி குறிப் பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.