மதுரை, பிப்.3- மதுரை வைகை ஆறு வடகரை ,தென்கரை பகுதி களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் நகரின் முக்கிய பகுதிக ளுக்கு உட்பட்ட இடங்களில் ஆற்றுக்குள் சென்று வருவ தற்காக படித்துறைகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வைகை ஆற்றுப் பகுதியில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனை தடுப்பதற்காகவே தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டன. ஆனால் குப்பை தொட்டிகள் சில இடங்களில் வைக்காத நிலையில் மீண்டும் ஆற்றுப் பகுதியிலேயே குப்பைகளை கொட்டக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆறு பெரும் சுகாதாரச் சீர்கேட்டின் பிடியில் உள்ளது. குறிப்பாக வைகை ஆறு தென்கரைப் பகுதியில் ஆரப்பாளையம், அண்ணா தோப்பு, நெல் பேட்டை வடகரை பகுதியில் மதிச்சியம், செல்லூர், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் குப்பை தொட்டிகள் இல்லாததால் ஆற்றுப்பகுதியில் குப்பை கொட்டக்கூடிய சூழ்நிலை உள்ளது. சிறு உணவகங்களும் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுகிறார்கள். செல்லூர் பகுதி கழிவு நீரகற்றும் நிலையத்திலிருந்து வரும் கழிவு நீரானது ஏ. வி. மேம்பாலம் கீழ்பகுதியில் ஒரு இடத்தில் குழாயில் விரிசல் ஏற்பட்டு அதிக அளவில் கழிவு நீர் வெளியேறி வைகை ஆற்றில் கலக்கிறது. இது குறித்து அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் கூறுகையில், நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம். தற்காலிகமாக அதை அடைத்து விட்டு செல்கிறார்கள். ஆனால் மீண்டும் கழிவு நீர் வெளியேறும் இடமாகவே உள்ளது. இதனால் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி பெரும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.