மதுரை, மே 25- மதுரை அரசு விரைவு போக்குவரத் துக்கழக நிகழ்ச்சியில் மக்கள் பிரதி நிதி அல்லாத பாஜக நிர்வாகி பங்கேற்ற தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை பணிமனை கிளை மேலாளர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: மதுரை பணிமனையில் - மார்னிங் ஸ்டார் சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் இல வச மருத்துவ பரிசோதனை முகாம் 22.12.2021 முதல் 24.12.2021 ஆம் தேதி வரை நடைபெற்றது. பரிசோதனையில் கலந்து கொண்டு - கண் பார்வை குறை பாடு உள்ள தொழிலாளர்கள், பணியா ளர்களுக்கு 24.5.2022 ஆம் தேதியன்று அரசு விரைவு போக்குவரத்து கழக மதுரை பணிமனை அலுவலகத்தில் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற வுள்ளதாக - கிளை மேலாளர் அபிமன்யு 23.05.2022 ஆம் தேதியன்று நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் - தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான - அரசு விரைவு போக்குவரத்து கழக மதுரை பணிமனை அலுவலகத்தில் - மக்கள் பிரதிநிதி அல்லாத பாஜக கட்சியை சேர்ந்த மதுரை மாநகர் மாவட்ட தலை வர் சரவணன் என்பவரை அழைத்து தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அலுவலகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சி நடந்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அரசு விரைவு போக்குவரத்து கழகம் - மதுரை பணிமனை கிளை மேலாளர் அபி மன்யு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தி ருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்க தாகும். அரசுக்கு சொந்தமான அலுவல கத்தில் மக்கள் பிரதிநிதி அல்லாத, அரசி யல் கட்சி சார்ந்த நபரை அழைத்து ,நிக ழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கிளை மேலா ளர் அபிமன்யு மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் துறைரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.