திருநெல்வேலி , மார்ச் 28 நெல்லை வண்ணார்பேட்டையில் நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு தொமுச மாநில அமைப்புச் செயலாளர் தர்மன்,சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர் மோகன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சடையப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர், மறியல் போராட்டத்தில் எஸ்எம்எஸ் மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன், ஐஎன்டி யூசி கண்ணன், ஏஐசிசிடியூ கணேசன் , டிடிஎஸ்எப் சந்தானம், சிஐடியு நிர்வாகிகள் ஜோதி, கந்தசாமி , தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பால்ராஜ், பிரமநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் 620 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் முக்கூடலில் நடைப் பெற்ற மறியல் போராட்ட்த்தில் 142 பெண்கள், 80 ஆண்கள் உள்பட மொத்தம் 222 கைது செய்யப்பட்டனர், வீரவநல்லூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர் எம்.சுடலைராஜ், கீதா ,தொ.மு.ச சார்பில் பழனி,ஏ.ஐ.டி.யு.சி குமார், ஐஎன்டியூசி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 239 பேர் கைது செய்யப்பட்டனர் ,விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 70 பேர் கைது செய்யப்பட்டனர், நாங்குநேரியில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் 75 பேர் கைது செய்யப்பட்டனர், வள்ளியூரில் நடைபெற்ற போராட்டத்தில் 213 பேர் கலந்து கொண்டனர், மொத்தம் மாவட்டம் முழுதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1600 பேர் கைது செய்யப்பட்டனர்.
எல்ஐசி'
நெல்லை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு எல்ஐசி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ஊழியர்கள் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் பட்டன் தலைமை தாங்கி னார். பொதுச் செயலாளர் பொன்னையா சிறப்பு ரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் கோட்ட தலைவர் செ.முத்துக்குமாரசாமி, நிர்வாகிகள் மதுபால், பால முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி
ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத , தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து தென்காசி மாவட்டத்தில் தென்காசியில் 152 பேர், பாவூர்சத்திரத்தில் 225 பேர், ஆலங் குளத்தில் 235 பேர் , கடையத்தில் 155 பேர், செங்கோட்டையில் 310 பேர், கடையநல்லூரில் 38 பேர், புளியங்குடியில் 113 பேர் , சிவகிரியில் 120பேர், ராயகிரியில் 90 பேர் , சங்கரன்கோ விலில் 210 பேர், திருவேங்கடத்தில் 96 பேர் என மொத்தம் 11 இடங்களில் மறியல் நடை பெற்றது. அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் , விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் மறியல் போராட்டத்தில் பங் கேற்றன. தென்காசியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் வேல்முருகன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சுப்பையா, ஏ ஐ சி சி டி யு மாவட்ட பொறுப்பா ளர் ஐயப்பன் தலைமை தாங்கினர்.போராட்டத்தில் 400க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற னர். 152 பேர் கைது செய்யப்பட்டனர் மறியல் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் துவக்கி வைத்தார். போராட்டத்தை வாழ்த்தி தென்காசி அனைத்து தொழிற்சங்க வட்டாரச் செயலாளர் கே மாரியப்பன், ஏஐசிசி டியூ பொறுப்பாளர் அயூப் கான், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரை சிங், ஜனநாயக மாதர் சங்க தலைவர் பேராசிரியர் சங்கரி ஆகியோர் பேசினர். ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட தலைவர் சலீம் முகமது மீரான், சிஐடியு நிர்வாகிகள் தானு மூர்த்தி, ஐயப்பன் , ராமமூர்த்தி , கருப்பையா, பிச்சுமணி, நாகலிங்கம் , ராமசாமி அருணாசலம், ஆறுமுகம் , ஈபி சங்க நிர்வாகிகள் பச்சை யப்பன், பட்டமுத்து, அங்கன்வாடி சங்க நிர்வாகி கள் முருகம்மாள் , சந்தன குமாரி ,மைதீன் பாத்து, என்ராயல் பாலாஇசக்கி, மூக்கையா , சுரேஷ், ஏஐடியூசி சங்க நிர்வாகிகள் மா கணேசன், கிருஷ்ணன் , ராசையா , ராஜேந்திரன் , பிச்சை யா, ஏஐஐசிசிடியு நிர்வாகிகள் ஷேக் மைதீன், முத்துச்சாமி , தம்பிதுரை , மாடசாமி , வேலு ஆகியோர் பங்கேற்றனர். தென்காசி மாவட்டத்தில் லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலா ளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், அங்கன் வாடி தொழிலாளர்கள், போக்குவரத்து தொழி லாளர்கள் ,மின்சார தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.