மயிலாடுதுறை, மே 23 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் இலுப்பூரில் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் 12 ஆவது ஒன்றிய மாநாடு தலைவர் ஷண்முகவள்ளி தலைமை யில் திங்கட்கிழமை நடைபெற்றது. முன்னதாக சங்கத்தின் கொடியை ஒன்றி யக் குழு உறுப்பினர் பார்வதி ஏற்றி வைத்தார். மத்தியக் குழு உறுப்பினர் என்.அமிர்தம், மாவட்ட செயலாளர் ஜி.வெண்ணிலா, மாநில துணைத்தலைவர் ஜி.கலைச்செல்வி, மாவட்ட தலைவர் பி.என்.ராஜலெட்சுமி, ஒன்றிய செயலாளர் டி.ஆர்.ராணி உள்ளிட்டோர் உரை யாற்றினர். தரங்கம்பாடி வட்டம், கழனிவாசல் கிராமத் திலுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ள தீண்டாமை கொடுமைக்கு எதிராக மாதர் சங்கத்தின் சார்பில் மாபெரும் போராட் டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. நூறுநாள் வேலையை பேரூராட்சி பகுதிகளி லும் விரிவுபடுத்திட வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் புதிய ஒன்றிய தலைவராக ஷண்முகவள்ளி, செயலாளராக டி.ஆர்.ராணி, பொருளாளராக பி.குணசுந்தரி, துணைத் தலைவராக எம்.செல்வபாக்யவதி, துணை செயலாளராக எஸ்.அருள்செல்வி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகி கள் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட ஒன்றியக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.