districts

img

ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.21-  உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை காரை ஏற்றி படுகொலை செய்த கொலை குற்றவாளி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை வழங்கியதை ரத்து  செய்ய வலியுறுத்தி ஐக்கிய விவ சாயிகள் முன்னணி மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் திரு மங்கலம் தேவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கி ணைப்பு குழு தலைவர் ஜி.சந்தா னம் தலைமை வகித்தார். சிபிஐ சார்பில் ஓ.சுப்புக்காளை, மக்கள் அதிகாரம் சார்பில் குருசாமி, விவ சாயிகள் சங்கம் சார்பில் ஆ.சி.சுப்பிரமணியன், பி.அய்யாவு, நாகேந்திரன், சிஐடியு சார்பில் மாவட்டச் செயலாளர் கே.அர விந்தன், மாவட்டத் தலைவர் செ. கண்ணன், நிர்வாகி சித்ரவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் நிறை வுரையாற்றினார்.