இராமநாதபுரம், அக்.5- இராமநாதபுரம் மாவட் டம், இராமேஸ்வரம் நக ராட்சியில் வழங்கல் துறை யின் மூலம் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வரு வது குறித்து ஒன்றிய உணவு -பொது விநியோகத்துறை அரசு செயலாளர் சுதன்சு பாண்டே பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு பொது விநியோகத்துறை ஆணை யர் வி.ராஜாராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், நுகர்பொருள் வாணிபக்கழக இணை நிர்வாக இயக்குநர் கே.கற்ப கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆய்வின் போது அரசு செயலாளர் இராமேஸ் வரம் நகராட்சிக்கு உட் பட்ட திட்டக்குடி பாரதி நக ரில் உள்ள ராம்கோ நியாய விலைக் கடைக்கு சென்று உணவுப் பொருட்களின் தரம் குறித்து பார்வை யிட்டதுடன் பதிவேடுகளை ஆய்வு செய்து பொருட்க ளின் இருப்பு விவரம் குறித் தும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் எவ்வாறு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன என கேட்டறிந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் தடை யின்றி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.