அகில இந்திய மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு
திருவனந்தபுரம், மே 14- ஒன்றிய அரசின் தொழி லாளர் விரோதக் கொள்கை களுக்கு எதிராக அனைத்துத் துறை ஊழியர்களும், தொழி லாளர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று ஏ.கே.பத்ம நாபன் கூறினார். பல்வேறு துறைகளில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் 130 சங்கங் களை பிரதிநிதித்துவப்படுத் தும் மகா கூட்டமைப்பின் (கான் பெடரேசன்) 27ஆவது தேசிய மாநாடு திருவனந்த புரத்தில் உள்ள எம். கிருஷ் ணன் நகரில் (நேஷனல் கிளப்) தொடங்கியது. அகில இந்திய தலைவர் ரவீந்திரன் பி.நாயர் கொடியேற்றினார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை துவக்கி வைத் தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது: என்எப்பிஇ மற்றும் ஐஎஸ்ஆர்ஓ ஊழி யர் அமைப்புகளின் அங்கீகா ரத்தை ரத்து செய்வது, தொழிற்சங்க உரிமைகளை மொத்தமாக மறுத்ததன் ஒரு பகுதியாகும். இது மற்ற பகுதிகளுக்கும் பரவும். இது போன்ற ஜனநாயக விரோத அணுகுமுறைகளுக்கு எதி ராக ஒருங்கிணைந்த போரா ட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அகில இந்திய மாநில ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க உதவிப் பொதுச் செயலாளர் கே.என்.ஜோதிலட்சுமி, கான்ஃபெட் முன்னாள் பொதுச் செயலாளர் சி.சந்திரன்பிள்ளை, செயல் தலைவர் தபஸ் போஸ் ஆகி யோர் பேசினர். 14 ஆண்டு கள் பணிநீக்கம் செய்யப் பட்டு மீண்டும் பணியில் சேர்ந்த ஏஜிஸ் அலுவலக ஊழியர் கே.ஏ.மானுவல் மாநாட்டு அரங்கில் சிறப் பிக்கப்பட்டார். பொதுச்செய லாளர் ஆர்.என்.பராசரர் செயல்பாட்டு அறிக்கையை யும், பொருளாளர் எஸ்.பி. யாதவ் வரவு செலவு அறிக் கைகளையும் தாக்கல் செய்தனர். வரவேற்புக்குழு செயல் தலைவர் வி. ஸ்ரீகுமார், பொது அழைப்பா ளர் பி.கே.முரளிதரன் ஆகி யோர் பேசினர். சுமார் 300 பிர திநிதிகள் பங்கேற்றனர்.