திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் பல இடங்களை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், சின்னாளப்பட்டி செயல் அலுவலர் செல்வராஜ் ,பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.