districts

மதுரை விரைவு செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய மாநாடு

விருதுநகர், ஜூன் 28- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் விருது நகர் தெற்கு ஒன்றிய 2 வது மாநாடு நடைபெற்றது. ஆர்.ஆர்.நகர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் கே.ஜானகிராமன் தலைமை தாங்கினார். பி.வரதராஜ் கொடியேற்றினார். அஞ்சலி தீர்மானத்தை கருப்பையா வாசித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆரோக்கியராஜ் வரவேற்றார். துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் கே.நாகராஜ் பேசி னார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.நேரு, மாதர் சங்க  ஒன்றிய தலைவர் எம்.விசாலம் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர். மாநில செயலாளர் ஜீவா நிறைவுரையாற்றி னார். முடிவில் கல்யாணிராசு நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வு : ஒன்றியத் தலைவராக தர்ம லிங்கம், செயலாளராக எஸ்.மாரீஸ்வரி, பொருளாளராக கே.ஆரோக்கியராஜ் உட்பட 16 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.

சாம்பவிகா பள்ளி  அனைத்திலும் முதல்நிலை பள்ளி செயலர் பேட்டி

சிவகங்கை, ஜூன் 28-  சிவகங்கையில் உள்ள சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி எல்லா நிலைகளிலும் முதல்நிலை வகித்து வருகிறது என பள்ளியின் செயலர் சேகர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், சாம்பவிகா மேல்நிலைப்  பள்ளி பிளஸ்-2 வகுப்பில் 228 மாணவர்கள் மொத்தம் தேர்வு எழுதியதில் 227 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கி றார்கள். தமிழ் பாடத்தில் 7 மாணவர்கள் 99 மதிப்பெண்  களும், ஆங்கிலத்தில் மூன்று மாணவர்கள் 98 மதிப்பெண்  ணும், இயற்பியலில் 97 மாணவர்களும், வணிகவியலில் 99 மதிப்பெண் ஒரு மாணவரும், பொருளியலில் 97 மதிப்  பெண் இரண்டு பேர் ,கணிதத்தில் 100 ஒருவர், வேதி யியலில் 100 மதிப்பெண் 2 பேர், கணினி அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் ஒரு மாணவர், கணினி பயன்பாடு கள் இரண்டு பேர் 100 மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள். கணக்கு பதிவியலில் 100 மதிப்பெண் ஒரு மாணவர் எடுத்திருக்கிறார். 580 மதிப்பெண்ணுக்கு மேல் இரண்டு மாணவர்கள், 570க்கு மேல் 8 மாணவர்கள், 560க்கு மேல்  11 மாணவர்கள், 550க்கு மேல் 15 மாணவர்கள், 500க்கு மேல்  50 மாணவர்கள், 450-க்கு மேல் 111 மாணவர்கள், 400க்கும் மேல் 160 மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 244 பேரும் தேர்ச்சி  பெற்றிருக்கிறார்கள். 100 சதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார் கள். தமிழ் பாடத்தில் 4 பேர் 98 மதிப்பெண் எடுத்துள்ளனர்.  ஆங்கிலத்தில் ஒருவர் 99 மதிப்பெண் , அறிவியல் பாடத்  தில், சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மாணவர் 100 மதிப்  பெண் எடுத்திருக்கிறார். 475 க்கு மேல் இரண்டு மாண வர்கள், 450-க்கு மேல் 19 பேர், 400க்கு மேல் 58 பேர்  மதிப்பெண் எடுத்துள்ளனர். 11 ஆம் வகுப்பு தேர்வில்  212 மாணவர்களில் 212 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கி றார்கள். 100 சதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஒரு மாண வர் கணிதத்தில் 100 மதிப்பெண்ணும், வேதியியலில் 99 மதிப்பெண்கள் ஒருவரும், இயற்பியலில் 98 மதிப்பெண் ஒருவரும், கணினி பயன்பாட்டில் 98 மதிப்பெண் ஒருவ ரும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்ணும் ஒருவரும்,  கணினி அறிவியலில் 2 மாணவர்கள் 96 மதிப்பெண்ணும், பெற்றிருக்கிறார்கள் .இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் சங்க அமைப்புக்குழு கூட்டம்

சிவகாசி, ஜூன் 28- அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சிவகாசி ஒன்றிய அமைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது. திருத்தங்கல்லில் நடைபெற்ற கூட்டத்திற்கு முத்து மாரியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதேவி, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் கே.நாகராஜ் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கி னார். மாநிலச் செயலாளர் முத்துக்காந்தாரி சிறப்புரை யாற்றினார். 7 பேர் பொண் அமைப்புக்குழு தேர்வு  செய்யப்பட்டு அதில் ஒருங்கிணைப்பாளராக முத்துமாரி யம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதில், சிபிஎம் ஒன்றியகுழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, முத்துராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தேவாரம் அருகே தனியார் பேருந்து மோதி 2 பேர் பலி

தேனி, ஜூன் 28-  தேவாரம் அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த வர் ஜக்கன் மகன் சுருளிராஜ் (32) இவா் கட்டுமான  தொழிலாளி. இவரும் இவருடன் வேலை செய்யும் சுப்பு ராஜ் (32) என்பவரும் இரு சக்கர வாகனத்தில் தேவாரம்-போடி ரோட்டில் சென்றுள்ளனர். லட்சுமிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த டிராவல்ஸ் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுருளிராஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் இறந்தார்.  இதுகுறித்து ஜக்கன் கொடுத்த புகாரின்பேரில தேவா ரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து டிராவல்ஸ் பேருந்தை ஓட்டி வந்த திருநெல்வேலியை சேர்ந்த இமானு வேல் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மனைவி, மாமியாரை எரித்துக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருவில்லிபுத்தூர், ஜூன் 28-  மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் தெருவை சேர்ந்த வர் முருக பாண்டி (வயது 44). கூலித்தொழிலாளி .இவரது மனைவி  முத்துலட்சுமி . முத்துலட்சுமியின் அம்மா கமலாதேவி. முத்துலட்சு மிக்கும் முருக பாண்டிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது கடந்த 2009ஆம் ஆண்டு முத்துலட்சுமி திருத்தஙகளில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த முருக பாண்டி  கடந்த 14 .6.2009 அன்று மனைவி வீட்டுக்கு சென்று கதவின் கீழ் பகுதி வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார் இதில் முத்துலட்சுமியும் கமலா தேவியும் படுகாயமடைந்து பலி யாகினர். இதுதொடர்பாக திருத்தங்கல போலீசார் வழக்கு பதிவு செய்து  முருக பாண்டியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திரு வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது இந்த வழக்கில் நீதிபதி பகவதி அம்மாள் அளித்த தீர்ப்பில், மனைவி மற்றும் மாமியாரை எரித்துக் கொன்ற முருக பாண்டிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.5000 ஆயிரம் அபராத மும் விதித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

சின்னத்திற்கு யார் கையெழுத்து போடுவது  அதிமுக வேட்பாளர் சுயேட்சையாக போட்டி 

தேனி, ஜூன் 28- ஒற்றை தலைமை பிரச்சனையால் பெரியகுளம் நகராட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரட்டை  இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடை பெறும் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. தி.மு.க சார்பில் ஜியாவுதீன் அக்பர் மற்றும் சுயேட்சைகள் 4 என மொத்தம் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை பிரச்சனையால் கட்சியில் இருந்து இரட்டை இலை சின்னத்  திற்கு அங்கீகார கடிதம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயினுலாபுதீன் தற்போது சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள வடபுதுப்  பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 13 பேர், டி.வாடிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், வடபுதுப்பட்டி மொட்டனூத்து ரெங்க சமுத்திரம், முத்தாலம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர், சின்னஓவுலாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் என மொத்தம் 28 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வருகிற 30-ந்தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் வருகிற ஜூலை 9- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வடபுதுப்பட்டி, மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், முத்தலாம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளதால் அங்கு அவர்கள் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது  நெல்லை-ஈரோடு,  மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஜூலை 11 முதல் இயக்கம்

விருதுநகர், ஜூன் 28- ரயில் பயணிகள் மற்றும் தென் மாவட்ட மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட திருநெல்வேலி-ஈரோடு, மயிலாடுதுறை இணைப்பு பயணிகள் ரயில் ஜூலை.,11 முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. மதுரை ரயில்வேக் கோட்டத்தில் திருநெல்வேலி முதல் மயிலாடுதுறை இணைப்பு ஈரோடு வரை வந்து சென்ற பயணி கள் ரயிலானது நாள்தோறும் இயக்கப்பட்டு வந்தது. இந்த  வண்டியானது, நெல்லையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக் கல் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து இரு ரயில்களாக திருச்சி வழியாக தஞ்சாவூர்,மயிலாடுதுறை வரைக்கும் சென்றது. திண்டுக்கல்லில் இருந்து கரூர் வழியாக ஈரோட்டிற்கும் இணைப்பு ரயிலாக இந்த வண்டி இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் வண்டியை அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், புனித ஸ்தலங்களுக்கு செல்லக் கூடிய பக்தர்கள் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், கொரோனா பரவலைத் தொடர்ந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2020 மார்ச் 21ல், இந்த ரயில் வண்டியை ரயில்வே நிர்வாகம் நிறுத்தியது. தற்போது,கொரோனா பரவல் குறைந்தது. தற்போது பொது முடக்கம் முற்றிலும் விலகிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலை யில், கடந்த 2021 செப்.,1 முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதேநேரத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படாமல், அதே ரயிலில் பயணிக்க எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரு கிறது. அந்த வகையில், மதுரை-செங்கோட்டை, செங்கோட்டை-திருநெல்வேலி, திருநெல்வேலி-திருச்செந்தூர், மதுரை-இராமேஸ்வரம் ஆகிய ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட ( வண்டி எண் 16845, 16846, 16847,16848 ) நெல்லை-மயிலாடுதுறை, ஈரோடு இணைப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென ரயில் பயணிகள், பொதுமக்கள் மற்றும் தென் மாவட்ட எம்.பிக்கள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் மீண்டும் நெல்லை, திண்டுக்கல், ஈரோடு, மயிலாடுதுறை இணைப்பு ரயிலை வரும் ஜூலை.,11 முதல் இரு மார்க்கமாக இயக்குவதற்கு அனுமதியளித்துள்ளது. அதேநேரத்தில் பிற பயணிகள் ரயில்களுக்கு எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிப்பது போல்,இந்த வண்டிக்கும் எக்ஸ்பிரஸ் கட்டணமே வசூலிக்கப்பட உள்ளது.

மேலக்குயில்குடியில் சிபிஎம் புதிய கிளை துவக்க விழா

மதுரை ஜூன் 28-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மேலக்குயில் குடியில் கட்சியின் புதிய கிளை துவக்க விழா மற்றும்  செங்கொடியேற்றும் நிகழ்ச்சி கிளைச் செயலாளர் எம்.ராஜா தலைமையில் திங்களன்று டைபெற்றது. பி.காந்தி முன்னிலை வகித்தார்.  மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் செங்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர்  மாவட்ட செயலாளர் மா.கணேசன், தாலுகாச் செயலாளர் எம்.ஜெயகுமார் ஆகியோர் பேசினர்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.முத்துராஜூ, தாலுகாக்  குழு உறுப்பினர்கள் பி.தமிழரசன், எம்.தேவந்திரன், கிளை உறுப்பினர்கள் மற்றும் கிராமத்து பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.