சேலம், ஜன.28- சேலம் ஜலகண்டபுரம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், ஜலகண்ட புரம் பேருந்து நிலைய வளா கத்தில் செயல்படும் இரண்டு டாஸ்மாக் கடைகளால் அப்பகுதி மக்கள், பேருந்து பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு இட மாற்றம் செய்ய வேண்டுமென வாலிபர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வந் தனர். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றம் செய்யும் பொருட்டு கடந்த நவம்பர் மாதம் ஜலகண்டபுரம் பேரூராட்சி எல் லைக்குட்பட்ட மயானம் அமைந் துள்ள பகுதியில் ஒரு கடையும் தோரமங்கலம் கிராமம் பொடை யன் தெரு செல்லும் வழியில் மற் றொரு கடையையும் அமைக்கும் பணியில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், தங்கள் பகுதி யில் டாஸ்மாக் கடை அமைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடும் என கூறி அப்பகுதி மக்கள் தோரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், ஒன்றிய கவுன் சிலரும், ஒன்றிய பெருந்தலைவரு மான பானுமதி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பாலசுப்ரமணி யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நங்கவள்ளி ஒன்றிய செய லாளர் கே.ராஜாத்தி, பொடையன் தெரு கிளை செயலாளர் விஜய குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய தலைவர் கார்த்திகா தேவி, ஒன்றிய செயலா ளர் கவிதா வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பார்த்தசாரதி, ஒன்றிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ஜலகண்டபுரம் எல்லைக்குட்பட்ட மயான பகுதி யில் ஒரு கடை திறக்கப்பட்டதுடன் பொடையன் தெரு பகுதியில் மற் றொரு கடை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டது.
இந்நிலையில், வெள்ளியன்று மாலை ஏற்கனவே பொடையன் தெரு பகுதியில் கடை அமைக்க தேர்வு செய்யப்பட்ட கட்டிடத்தில் மதுபாட்டில்களை கொண்டுவந்து இறக்கும் பணியில் டாஸ்மாக் பணி யாளர்கள் ஈடுபட்டனர். இது குறித்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் திரண் டனர். இதனையடுத்து, தோர மங்கலம் ஊராட்சி மன்ற பிரதி நிதிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர், மாதர், வாலிபர் சங்கத்தினர் திரண்டு ஜலகண்டபுரம் - சின்ன பம்பட்டி செல்லும் பிரதான சாலை யில் தடுப்புகள் அமைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் வாட்டாட்சியர் முத்துராஜா, ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா மற்றும் காவல்துறை அதிகாரிகள் மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, கடையை உடனடி யாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத் தனர். இதனையேற்று டாஸ்மாக் மேலாளர் தலைமையில், டாஸ் மாக் கடை அமைக்க போவதாக இருந்த கட்டிடத்தில் இருந்து மது பாட்டில்களை எடுத்து சென்றனர். இனி அந்த பகுதியில் டாஸ்மாக் கடை வைக்கமாட்டோம் என்று உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.