ஒட்டன்சத்திரம், ஏப்.30- ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் அனுமதியின்றி மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து வரு கிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நவக்கானி கிரா மத்தில் வெள்ளியன்வலசு என்ற ஊரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரி யகுளம் உள்ளது. இங்கு அனுமதி பெறாமல் இரவு பகலாக 50 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற் பட்ட கிராம பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீர் இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படும். இதனால் சுற்றுவட்டார ஆயிரத்துக் கும் மேற்பட்ட விவசாய நிலங் கள் பாசன வசதி பெற்று வரு கிறது. இந்த குளம் குடிநீர் தேவைக்கு முக்கிய பங்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. குளத்தில் அனுமதி யின்றி மண் எடுப்பதால் நிலத் தடி நீர்மட்டம் வெகுவாக குறைகிறது. விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட்டு குளத்தில் மண் எடுப் பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.