districts

மதுரை முக்கிய செய்திகள்

அமைச்சராகிறார்  உதயநிதி ஸ்டாலின்

சென்னை, டிச.12- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று மாநில அமைச்சரவையில் அமைச்சராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டா லினை இணைக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். புத னன்று (டிச.14) காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகை யில் அவர் பதவியேற்கிறார்.

ஜெயமங்கலத்தில்  சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தேனி, டிச.12- பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலத்தில் மக்களின் அடிப்படைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி  மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர். ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், எஸ். வெண்மணி, தாலுகா செயலாளர் எம்.வி.முருகன், கிளைச் செயலாளர்கள் ஏ.முத்திருளன், எஸ்.பாண்டி, டி.காளி முத்து,  எம். ஆறுமுகம், பி.பாண்டி மற்றும் ஆர்.கே. ராமர்,  கே.கோமதி, ஏ.மன்னர்மன்னன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாம்

திருவில்லிபுத்தூர், டிச.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திரு வில்லிபுத்தூர் ஒன்றியம், நகர்  இடைக்கமிட்டி உறுப்பி னர்கள் கிளைச் செயலாளர்கள் மற்றும முன்னணி  ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் திங்கட்கிழமை நடை பெற்றது முகாமிற்கு நகர் செயலாளர் ஜெயக்குமார் தலை மை வகித்தார். முகாமில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் கருத்துரையாற்றினர். ஒன்றியச் செயலாளர் சசிகுமார்,  மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவில்லிபுத்தூரில் கிறிஸ்துமஸ் விழா

திருவில்லிபுத்தூர், டிச.12- திருவில்லிபுத்தூரில் கிருபை கிரியை சேவை அமைப்பு சார்பில் சி. எம். எஸ். மேல்நிலை பள்ளியில் கிறிஸ்மஸ்  பண்டிகையை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிறுவன அமைப்பாளரும் முன்னாள் பள்ளி ஆசிரியருமான யேசு தாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது. சி. எம். எஸ் பள்ளி தாளா ளர் மற்றும் தலைமை ஆசிரியர் சாம் ஜெப ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 250 பயனாளிகளுக்கு சேலை வேட்டி அரிசி கொண்ட பரிசு பொருள்களை வழங்கி கிருபை கிரியை அமைப்பு கடந்த 21 வருடங்களாக கிறிஸ்மஸ் விழாவின் போது பயனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கி வருவதை குறிப்பிட்டு பேசினார். போதகர் பர்னாபாஸ் ஜெபம் செய்து சிறப்பு கிறிஸ்மஸ் அருளுரை வழங்கினர். அவரது குழுவினர் ஏசு நாதர்  பிறப்பு குறித்து பாடல்களை பாடினர். விழா ஏற்பாடு களை கிருபை கிரியை அமைப்பினர் செய்திருந்தனர். முடிவில் அமைப்பின் நிறுவனர் யேசு தாஸ் முத்தையா நன்றி கூறினார்.

கொல்லங்குடி-முத்தூர் இடையே உள்ள டாஸ்மாக்கை அகற்றக் கோரிக்கை

சிவகங்கை, டிச.12- சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி-முத்தூர் சாலை யில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த னர். மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய  முத்தூரைச் சேர்ந்த  கவிதா கூறுகையில், “முத்தூரிலிருந்து கொல்லங்குடிக்கு  செல்லும் பெண்கள், பள்ளி மாணவி களுக்கு டாஸ்மாக் கடையால் பாதுகாப்பற்ற சூழல் உள்  ளது எனவே கடையை அப்புறப்படுத்த வேண்டு மென்றார். டாஸ்மாக் கடையை விரைவில் அப்புறப்படுத்தத் தவ றும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாதர்  சங்க மாவட்டத் தலைவர் பாக்கியலட்சுமி, மாவட்டச் செய லாளர் சாந்தி ஆகியோர் கூறினர்.

மானாமதுரையில் பாரதியார்  பிறந்ததினக் கொண்டாட்டம்

சிவகங்கை, டிச.12-  பாரதியாரின் 141-ஆவது பிறந்த தினம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்  மானாமதுரையில் கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவி களின் கலை நிகழ்வு மற்றும் செல்வக் கதிரவன் எழுதிய  அம்மா புத்தக மதிப்பாய்வு நிகழ்வு நடந்தது. நிகழ்விற்கு தேவதாஸ் தலைமை வகித்தார். ரசீந்திரகுமார் வர வேற்றார். வழக்கறிஞர் முத்துக்குமார் முன்னிலை வகித்  தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜீவசிந்தன், மாவட்டத் தலை வர் தங்க முனியாண்டி, மாவட்டச் செயலாளர் அன்பர சன், மாவட்டப் பொருளாளர் பாலமுருகன், தலைமை  ஆசிரியர் சிவகுருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வைகை அணையில்  தண்ணீர் திறப்பு நிறுத்தம் 

தேனி, டிச.12- கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை யால்  வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டியது.  அதைத் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட் டது. மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்  தது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.55 அடியாக இருந்தது. இதனால் அணை யிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் ஞாயி றன்று  குறைக்கப்பட்டது. திங்களன்று  காலை பாசனத்துக்  கான தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 842 கன அடி நீர் வருகிறது.  நீர் பிடிப்புப் பகுதியான வெள்ளி மலையில் பெய்த  தொடர் மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதி கரித்துள்ளது. இதனால் விவசாயிகள்  விவசாயப் பணி களில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணை யின் நீர்மட்டம் 140.80 அடியாக உள்ளது. 699 கனஅடி நீர்  வருகிறது. 511 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு  அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கனஅடி நீர் வருகிறது. 40 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்  பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது.  63 கனஅடி நீர் வருகிறது. 30 கனஅடி நீர் திறக்கப்படு கிறது.

தமிழக மீனவர்கள் 24 பேர் விடுதலை 

கொழும்பு, டிச.12- புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்  றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும்  மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான  மீனவர்கள் நவம்பர் 28-ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச்  சென்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஐந்து விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 24 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர்  அவர்களை இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத் திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து 24 பேரும் சிறை யில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை சிறை யிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரையும் நிபந்த னைகளுடன் விடுதலை செய்து ஊர் காவல் துறை நீதிமன்ற  நீதிபதி செ.கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.  பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து படகுகளின் உரிமை கோரல் வழக்கை  2023-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி விசாரிப்பதாக தெரி வித்தார்.

நகை மோசடி: இருவர் கைது

மதுரை, டிச.12- மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஒரு பிரபல  கடையில் மதுரை மாவட்டம் செக்கானூரணி பன்னியான்   பகுதியைச் சேர்ந்த சுமதி (50) மற்றும்  பிரியதர்ஷினி (28)  ஆகிய இருவரும் நகை வாங்குவது போல கடைக்கு வந்துள்ளனர்.  இவர்கள் இருவரும்  கடையில் நகை வாங்கினர். சிறிது நேரத்தில் நகையை திரும்பக் கொடுத்துள்ளனர். நகையை பரிசோதித்த விற்பனையாளர் கவரிங் நகை  என்பதைக் கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் அளித் தார். காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி பையில் வைத்திருந்த ஒரிஜினல் நகையை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் 

திருவில்லிபுத்தூர், டிச.12- இராஜபாளையம் அருகே உள்ள தென்கரை வடக்கு  தெருவில் வசிப்பவர்  வெள்ளையம்மாள் (37). இவரது  வீட்டிற்கு அருகே காளியம்மாள் (50) என்பவர் வசித்து வரு கிறார். இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்  ளது. இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி காளியம்மாளுக்கும் வெள்ளியம்மா ளுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை முற்றியதில் வெள்ளையம்மாள் அரிவாள் மனையால்  காளியம்மாளை வெட்டி படுகாயபடுத்தியுள்ளார் இதில்  காயமடைந்த காளி யம்மாள் அதே இடத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.பகவதி அம்மாள் குற்றம் சாட்டப்பட்ட வெள்ளையம்மாளுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

நீட் தேர்வு முறைகேடு:  பீகாரைச் சேர்ந்த மூவர் கைது 

தேனி, டிச.12- கடந்த 2019-ஆம்  ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முறை கேடு தொடர்பான  வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த  மூன்று பேரை திங்கள்கிழமை, தேனி சிபிசிஐடி காவல் துறையினர்  கைது செய்தனர். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட் டம் செய்த முறைகேட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூரியா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரை  கடந்த 2019-ஆம் ஆண்டு தேனி சிபிசிஐடி காவல்துறை யினர்  கைது செய்தனர். இந்த வழக்கில் உதித்சூரியா உட்பட ஏழு மாணவர்கள், அவர்களது பெற்றோர் உட்பட   14 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் இடைத்தர கர்களாக செயல்பட்ட கேரளத்தைச் சேர்ந்த ரஷீத் உள்  ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலை யில், நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்புடைய  இடைத் தரகர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ண முராரி (37) என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர்  சென்  னையில் கைது செய்தனர். இவர் அளித்த தகவலின் பேரில், இதே வழக்கில் தொடர்புடைய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சாகத் குமார்  சின்ஹா (39), ரகுநாத் மணி பாண்டே ஆகியோரை பெங்க ளூருவில்  கைது செய்த, தேனி சிபிசிஐடி  காவல்துறை யினர் தேனியில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

கஞ்சா கடத்தல்; ஒருவர் கைது

தேனி, டிச.12- தேனி -கம்பம் சாலையில் தப்புகுண்டு  போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜா, கஞ்சா தடுப்பு தொடர்பாக ரோந்து சென்ற போது  சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரை பிடித்து  விசாரித்தபோது அவரிடம் 1.800 கிலோ கஞ்சா இருந்தது  தகண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பிடிபட்டவர்  உத்தமபாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி யைச் சேர்ந்த ஜெயசங்கிலி மகன் சரவணன் என்பது தெரிய வந்தது.

கண்ணகி கோவிலை அறநிலையத்துறை ஏற்கக் கோரி கையெழுத்து இயக்கம்

தேனி, டிச.12- கண்ணகி கோவிலை  இந்து சமய அறநிலையத் துறை ஏற்க வேண்டும் என  பல்வேறு அமைப்புகள் சார் பில் உதவி ஆணையரிடம் மனுக் கொடுக்கப்பட்டது. தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணகி கோவில்  அமைந்துள்ளது. இக் கோவிலை இந்துசமய அற நிலையத்துறை கட்டுப்பாட்  டில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து  பொது மக்கள் கருத்து    கருத்து தெரிவிக்கலாம் என்று துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து மங்க லதேவி கண்ணகி கோட்ட சீர மைப்பு அறக்கட்டளை மக்க ளிடம் கையெழுத்து இயக்  கம் நடத்தியது. கண்ணகி  கோவிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற பலரும் கை யெழுத்திட்டுள்ளனர். மனு வை செயலாளர் க.எழில்  அன்பன் தலைமையில் மக்  கள் தேனி அறநிலையத் துறை உதவி ஆணையர் கலைவாணனிடம் அளித்த னர். இதேபோல் மங்கல தேவி கண்ணகி அறக்கட் டளை சார்பில் பொருளாளர் சு.கார்திக்கேயன் தலைமை யிலும், தமிழ்நாடு ஆலைய பாதுகாப்பு இயக்கத்  துணைத் தலைவர் பாப்பையாரவி தலைமையிலும் மனுக்கள் அளிக்கப்பட்டன.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுமா?

அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, டிச.12-  பொங்கல் பரிசுத்  தொகுப்பில் வழங்கப்பட உள்ள பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தர விட கோரி வழக்கில் கூட்டுற வுத்துறை செயலர், தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனுத் தாக் கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் பொதுநல வழக்கு தாக் கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில்  2017-ஆம் ஆண்டு முதல் பொங்  கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக் கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 2.20 கோடி குடும்பங்களுக்கு பொங்கல்  பரிசுத் தொகுப்பு வழங்கப் பட உள்ளது. இதற்கான வேஷ்டி, சேலைகளை தமி ழக நெசவாளர்களிடம் மட் டுமே வாங்க வேண்டும் என்ற  பாராட்ட தகுந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதுவரை அரிசி, வெல்  லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட இருபது வகையான விவ சாயப் பொருட்கள் அரு காமை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்  டுள்ளது. சில சமயங்களில், அருகாமை மாநிலங்களிலி ருந்து செய்யப்படும் கொள்  முதலில்  தரமான பொருட்கள் வழங்குவது கிடையாது.  எனவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்க உள்ள பொருட்களை தமிழக விவ சாயிகளிடமிருந்து வாங்கி னால் விவசாயிகள் பலன டைவர். இது தொடர்பாக நட வடிக்கை  கோரி மனு அளித்  தும் நடவடிக்கை இல்லை.  பொங்கல் பரிசுத் தொகுப் பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவ சாயிகளிடமிருந்து கொள் முதல் செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியி ருந்தார். இந்த மனு திங்களன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந் தது. அப்போது அரசுத் தரப்  பில், “கொள்முதல்” அரசின் கொள்கை ரீதியான முடிவு எனத் தெரிவிக்கப்பட்டது. இயைதடுத்து நீதிபதி கள், வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலர், தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்  தரவிட்டு வழக்கை டிசம்பர்  19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்  தனர்.