திண்டுக்கல்/ மதுரை, ஏப்.15- மக்களின் வாழ்க்கைநிலையை அதலபாதாளத்தில் தள்ளிய பாஜக ஆட்சியை வாக்குச்சீட்டால் விரட்டி யடிப்போம் என்று சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.
இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பெத்தா னியாபுரம், பரவை ஆகிய இடங்களி லும், சிபிஎம் திண்டுக்கல் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து தாடிக்கொம்பு பகுதியிலும் ஏப்ரல் 14 அன்று மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரங்களில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது:
சு.வெங்கடேசனின் குரல்
மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன். மற்ற கட்சிகளின் வேட்பா ளர்கள் செய்யப்போவதைச் சொல்லி வாக்கு கேட்பார்கள். ஆனால் இந்தியா கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் செய்த பணிகளை தைரி யமாகச் சொல்லி வாக்கு கேட்கிறார். அவர் மதுரைக்காக மட்டுமல்ல, நாடா ளுமன்றத்தில் மாநில உரிமைகளுக் காக, தமிழர்களின் நாகரிகமான கீழ டிக்காக குரல் கொடுத்தவர். அரசியலமைப்புச்சட்டம்,மதச்சார்பின்மையைப் பாதுகாக்கவும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் பேசியவர்.
இறுதி வாய்ப்பு
டாக்டர் அம்பேத்கர் இயற்றிய அரசி யலமைப்புச்சட்டத்தால்தான் நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் போராட முடிகிறது. அத்தகைய அர சியலமைப்புச்சட்டம் பாதுகாக்கப்படு வது இந்த தேர்தலில் முக்கிய கடமை யாக உள்ளது. இந்த தேர்தலின் மூலம் மதச்சார்பற்ற அரசு அமைந்தே ஆக வேண்டும். நமக்குள்ள ஒரே இறுதி வாய்ப்பு இந்த தேர்தல்தான். வேறு எந்த வாய்ப்பும் இல்லை.
பாஜகவின் மோடி ஆட்சியில் மக்க ளின் வாழ்க்கைநிலை அதலபாதாளத் தில் சரிந்து கொண்டிருக்கிறது.இதனை மீட்க இந்தியா கூட்டணி வேட்பாளர் களுக்கு வாக்களியுங்கள்.
அவசர அவியல்
அதிமுக மற்றும் பாஜகவின் கூட்ட ணிகள் அவசரத்தில் அள்ளிப்போட்டு கிண்டிய அவியலாக உள்ளது. ஆனால் மக்களின் பிரச்சனைகளுக் காக குரல் கொடுத்தவர்கள், அதற்காக களம் கண்டவர்களின் ஒற்றுமையால் உருவானது இந்தியா கூட்டணி.
ஊழலுக்கு எதிரான போராளி என்ற மோடியின் பிம்பம் தேர்தல் பத்திர ஊழல் மூலம் கிழிந்து தொங்குகிறது. தரமற்ற மருந்துகளை தயாரித்த 35 மருந்துக்கம்பெனிகள் பாஜகவுக்கு 1500 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளன. இந்த தரமற்ற மருந்துகளை பாஜக தலைவர்கள் வாங்கி சாப்பிடப்போவதில்லை. சாதா ரண ஏழை எளிய மக்கள்தான் வாங்கி பயன்படுத்தி பாதிக்கப்படுகின்றனர். வடமாநிலங்களில் பாஜக வேட்பா ளர்களை விவசாயிகளும் மக்களும் விரட்டியடிக்கின்றனர்.
பொய்யர்களின் கட்சி பாஜக.இவ்வ ளவு அதிகமாக பொய்களை பேசும் கட்சியை பார்த்தது இல்லை என்று பத்தி ரிகையாளர்களும் நடுநிலையாளர் களும் விமர்சிக்கின்றனர். அந்தள வுக்கு பொய்களை பேசுகின்றனர். இத்தகைய பாஜகவைச் சேர்ந்த இராம சீனிவாசன் தான் மதுரையில் போட்டி யிடுகிறார்.
சட்டமன்ற சீட்டுக்காக, நாடாளு மன்ற சீட்டுக்காக சுயலாபத்திற்காக பல கட்சிகளுக்கு தாவிய, ‘சர்வகட்சி சரவணன்’ என்று மதுரை மக்களால் அழைக்கப்படும் டாக்டர் சரவணன் தான் அதிமுகவின் வேட்பாளராக உள்ளார்.
100 நாள் திட்டத்தின் நிதியில் வெட்டு
கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டம் இருக்கிறது. பேரூராட்சி களில் இந்த திட்டம் இல்லை. இதே போல் மாநகராட்சி, நகராட்சி பகுதி களில் வேலை வாய்ப்புகளை உரு வாக்கிட மோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. இந்த 100 நாள் திட்டத்தை இன்னும் முறைப்படுத்த வேண்டும்.
ஆனால் 100 நாள் வேலைத்திட்டத் திற்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதியை வெட்டி சுருக்கியதால் இத்திட்டம் மண்மூடி போகச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி அரசு மேற்கொண்டு வருகி றது. மோடி அரசாங்கத்தின் மீது நமக்கு கோபம் வர வேண்டும். பாஜகவும், மோடி அரசும் விவசாயத்தொழிலாளர் களின் எதிரிகளாக உள்ளன.
மோடி அரசுக்கு முட்டுக்கொடுத்த அதிமுக
கடந்த 10 ஆண்டுகளாக இந்த அரசுக்கு ஆதரவு கொடுத்தது முட்டுக் கொடுத்தது அதிமுக தான். மக்களுக்கு விரோதமான மோசமான திட்டங்கள் வரும் போது நாடாளுமன்றத்தில் ஆத ரவு தெரிவித்தது இந்த அதிமுக தான். பாஜக செய்யும் அநியாயங்களை தட்டிக் கேட்காமல் அதற்கு ஆதரவாக நின்றார்கள்.
அதிமுக வேட்பாளர்கள் வரும் போது நீங்கள் கேள்வி கேட்க வேண் டும். ஜி.எஸ்.டி வரி கொண்டு வந்து இன்றைக்கு சிறு வியாபாரிகள், நடுத்தர வியாபாரிகள் என அனை வரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். மோடி அரசின் இத்தகைய மோச மான பொருளாதாரக் கொள்கை களுக்கு ஆதரவாக இருந்தது அதி முக அரசு. பாஜகவின் அனைத்து கொடுமைகளுக்கும் அதிமுகவும் பொறுப்பேற்க வேண்டும். எனவே, பாஜகவை நாம் நிராகரிக்கிற போது அதிமுகவையும் நிராகரிக்க வேண்டும்.
ஒன்றிய அரசு கொண்டு வந்த குடி கெடுத்த குடியுரிமை சட்டம், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற பல்வேறு மக்கள் விரோதச் சட்டங்களை எதிர்த்து, மக்களின் ஆதரவோடு போராடிய கட்சி கள் இன்றைக்கு இந்தியா கூட்டணி கட்சிகளாக இணைந்துள்ளன.
மாணவர்களின் கனவை சிதைத்த மோடி
நீட் தேர்வு, கியூட் தேர்வுகளை தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணித்து அவர்களின் உயர் கல்வி கனவுகளை சிதைத்த போதெல்லாம் திமுக தலை மையிலான ‘இந்தியா’ கூட்டணி கட்சி கள் போராடின. ஆளுநரைப் பயன் படுத்தி நம்முடைய அரசாங்கத்தின் செயல்பாட்டை முடக்குகிற போதெல் லாம் ஆளுநரைக் கண்டித்தும் மாநில உரிமைகளுக்காகவும் போராடிய கட்சி கள் தான் இந்தியா கூட்டணி கட்சிகள்.
அண்ணாமலை, வானதி வெட்கப்பட வேண்டாமா?
இன்றைக்கு ‘பெண் சக்தி’ என்று மோடி பேசுகிறார். திண்டுக்கல் மாவட்டத் தில் சில தினங்களுக்கு முன்பு காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றும் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாஜகவின் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கி றார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு வரை பாமக வேட்பாளர் திலக பாமாவிற்கு வாக்கு சேகரிக்க சென்று வந்தார். அண்ணாமலையோ, வானதி சீனிவாசனோ, மோடியோ, அமித் ஷாவோ இதற்காக வெட்கப்பட வேண்டாமா?
உறக்கத்திலிருந்த மகளிர் ஆணையம்
பாஜக எம்.பி.யும் மல்யுத்த வீரர் கள் சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூசன் சரண்சிங் பாலியல் தொந்த ரவு செய்வதாக மல்யுத்த வீராங்கனை கள் தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்தினர். பல முறை இது தொடர்பாக புகார்கள் கொடுத்தார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் இந்த முறை நாடாளு மன்ற தேர்தலில் போட்டியிட அந்த பிரிஜ் பூசன் சரண்சிங்கிற்கு பாஜக சீட் வழங்கியிருக்கிறது. இது தான் பாஜக பெண் குழந்தைகளை பாதுகாக்கிற லட்சணம்.
இத்தகைய பெண்கள் விரோத, மக்கள் விரோத பாஜகவையும் அவர் களுக்கு துணைநின்ற அதிமுகவை யும் வாக்குச்சீட்டால் மக்கள் தோற்க டித்து விரட்டியடிக்க வேண்டும். பாஜக வை வீழ்த்தி மதச்சார்பற்ற ஆட்சிய அமைய, இந்தியாவை காக்க,இந்திய மக்களின் வாழ்க்கையை காக்க இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத் தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்திற்கு சிபிஎம் கிளைச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார். பகுதிக்குழுச் செய லாளர் கு.கணேசன் பேசினார். மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இரா.லெனின், திமுக பகுதிச்செய லாளர்கள் ஜீன்ஸ் சிவா, தமிழரசன், நாகஜோதி சிவா, வேல்முருகன், மதி முக வட்டச் செயலாளர் ஞானம் மற்றும் இந்தியா கூட்டணிக்கட்சிகளின் நிர் வாகிகள் மற்றும் பெண்கள், இளை ஞர்கள் திரளானோர் பங்கேற்றனர். ஜான்போஸ்கோ நன்றி கூறினார். பாஜக அரசின் அட்டூழியங்கள், மக்க ளின் அவலங்கள் குறித்து காம்ரேட் டாக்கீஸ் குழுவினர் பாடல்கள் பாடினர்.
திண்டுக்கல் தொகுதி தாடிக்கொம் பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் பாக்கியம் வரவேற்றார். திமுக தாடிக்கொம்பு பேரூர் கழகச் செயலாளர் சுப ராமலிங்கம், அகரம் பேரூர் கழக செயலாளர் இள ஜெய பால், தாடிக்கொம்பு பேரூராட்சி தலை வர் கவிதா சின்னத்தம்பி, அகரம் பேரூ ராட்சி தலைவர் நந்தகோபால், காங்கி ரஸ் கவுன்சிலர் தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா ளர் சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாரியப்பன், திண்டுக்கல் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.அருள் செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் என்.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றியக் குழு உறுப்பி னர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.