districts

img

மேகமலை அருவிக்கு வருபவர்களிடம் இரு நிர்வாகங்கள் வசூல் வேட்டை

கடமலைக்குண்டு, பிப்.21- தேனி மாவட்டம் கடமலைக் குண்டு அருகே கோம்பைதொழு வில் மேகமலை அருவி அமைந் துள்ளது. இரண்டு ஆண்டு களுக்கு பின்பு கடந்த வாரம் மேகமலை அருவியில் சுற்று லாப் பயணிகள் குளிக்க வனத் துறையினர் அனுமதி வழங்கி னர். தற்போது நீர்வரத்து குறை வாகவே உள்ளது. இருப்பினும் அருவியில் குளிக்க தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேக மலை அருவிக்கு வரும் சுற்று லாப் பயணிகளுக்கு தலா ரூ.30 வீதம் வனத்துறை மூலம் வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலை யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகமலை அருவிக்குச் செல்லும் சாலையின் இடையே கோம்பைத்தொழு ஊராட்சி சார் பில் புதிதாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சோதனை சாவடி வழியாக அரு விக்கு செல்லும் ஆட்டோவிற்கு ரூ.25, காருக்கு ரூ.50, பேருந் துக்கு ரூ.100 வசூல் செய்யப்படு கிறது. அருகருகே இரண்டு சோத னைச் சாவடிகள் அமைத்து பணம் வசூல் செய்யப்படுவது சுற்றுலா பயணிகளிடம் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.  

சுற்றுலாப் பயணிகள் கூறு கையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்களுக்கு பணம்  வசூல் செய்யப்படுகிறது. ஆனால் வாகனங்கள் நிறுத்துவ தற்கு பார்க்கிங் உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து கொடுக்கப் படவில்லை. இதேபோல அருவி யில் வனத்துறையினர் சார்பில் பணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் அருவியில் தடுப்புக் கம்பிகள், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் நின்று அருவியில் குளிக்க வேண்டிய நிலை உள் ளது. காவல்துறையினர் பாது காப்பு இல்லாததால் பெண்கள் அருவியில் குளிப்பதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் அரு வியில் அமைந்துள்ள பெண்கள் உடை மாற்றும் அறை பரா மரிப்பு இல்லாமல் உள்ளது. எந்த அடிப்படை வசதிகளும் மேம் படுத்தாமல் எதற்காக இரண்டு இடங்களில் பணம் வசூல் செய்யப்படுகிறது. பார்க்கிங், சாலை உரிய அடிப்படை வசதி கள் ஏற்படுத்தி கொடுத்து அதன் பின்பு பணம் வசூல் செய்ய வேண்டும் என்றனர்.