திருப்பூர், டிச. 19 - கே.ஆண்டிபாளையம் ஊர்ப்புற நூலகம் மற்றும் நூலக வாசகர் வட்டம் இணைந்து ஞாயிறன்று 55 ஆவது தேசிய நூலக வார விழா, சமீபத்தில் நல் நூலகர் விருது, மாநில அள வில் கேடயம் பெற்றமைக்கு பாராட்டு விழா மற்றும் மாணவர் களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழாவை நடத்தி னர். வாசகர் வட்டத் தலைவர் சின்னச்சாமி தலைமை தாங்கி னார். பொருளாளர் ஜி.பழனிச்சாமி வரவேற்றார். கே.ஆண்டி பாளையம் தொடக்கப்பள்ளி, வேலம்பட்டி தொடக்கப்பள்ளி களில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி மற்றும் விழா அன்று நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் வென்ற வர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜ், கே.ஆண்டிபாளையம் தலைமை யாசிரியர் ஏ.பழனிச்சாமி, வேலம்பட்டி தலைமையாசிரியர் நவீன் பாபு, பொங்கலூர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் லிங் கேஸ்வரன் மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி னர். இந்நிகழ்வில் நூலகர்கள் சுப்பிரமணியன், வடிவேல் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் லெட்சுமணன், சுப்பிரம ணியம், மற்றும் மாணவர்கள் இளைஞர்கள் வாசகர்கள், புரவ லர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் நூலகர் கலைச்செல் வன் நன்றி கூறினார்.