மதுரை, ஜூன் 16- விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் 136-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 16 அன்று மதுரை மாவட்டம், திருமங்க லத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவில்லத்தில் அன்னாரின் உரு வச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடுதலைப் போராட்ட வீரரும் தலை சிறந்த நாடக கலைஞருமான தியாகி விஸ்வநாததாஸ் அவர்கள் சிவகாசியை சேர்ந்த சுப்பிரமணி பண்டிதர், ஞானம் மாள் தம்பதியினருக்கு 16.6.1886-அன்று பிறந்தார். மதுரை மாவட்டம் திருமங்க லத்தில் வாழ்ந்து வந்தார். தேசபக்தி பாடல்கள் மற்றும் நாடகத்தின் மூல மாக பொதுமக்களிடம் தேசப்பற்றை ஊக்குவித்தார். தேசத்தின் விடுதலைக் காக போராடி 29 முறை சிறை சென் றுள்ளார். தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் மாண்பை உலகறியச் செய்யும் நோக்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நினைவில் லம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அன்னாரது பிறந்த நாளான ஜூன் 16-ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தியாகி விஸ்வ நாததாஸ் நினைவில்லத்தில் அமைந் துள்ள சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் வருவாய் கோ டாட்சியர் (திருமங்கலம்) அபிநயா, திரு மங்கலம் நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி, நகராட்சி ஆணையாளர் டெரன்ஸ் லியோன், வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் அவர் கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.