districts

img

மரணிக்கும் வரை கட்சிக்காக பணியாற்றிய உன்னத தலைவர் தோழர் பி.முருகேசன்

தேனி, நவ.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேனி மாவட்டக்குழு உறுப்பி னரும், சிஐடியு தொழிற்சங்கத்தின் மூத்த தலைவரும் ,மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின்  மாவட்டச் செயலாளருமான   தோழர் பி.முருகேசன் (வயது 62)  உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, இந்திய தொழிற்சங்க மைய தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த  தோழர் முருகேசன் ,தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தீக்க திர் சந்தா அளிக்கும் நிகழ்ச்சிக்காக தேனி வந்த போது நிகழ்விடத்தின் அருகே உடல்நலக்குறைவு கார ணமாக காலமானார் . தேனி ஐடிஐயில் படித்த போது இந்திய மாணவர் சங்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு ,பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் மின் வாரி யத்தில் வயர்மேன் பணியில் சேர்ந்து படிப்படியாக இளநிலைப் பொறியாளராக பதவி உயர்வு பெற்று இரண்டாண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். மின் ஊழியர் மத்திய அமைப் பின் திட்ட தலைவர், செயலாளர், சிஐடியு அமைப்பில் மாவட்ட நிர்  வாகியாக பல ஆண்டுகள் திறமை யாக பணியாற்றினர் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்  குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.  சுமைப்பணி சங்க  மாவட்ட நிர்வாகி யாகவும், சிஐடியு கம்பம் ஏரியா தலைவராகவும் செயல்பட்டு வந் தார். இவருக்கு சாந்தி என்ற மனை வியும் காஸ்மீகரன் ,நிருபன் என்ற  இரண்டு மகன்களும் உள்ளனர்.

இறுதி மரியாதை 

அன்னாரது இறுதி நிகழ்ச்சி க. புதுப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது .க.புதுப்  பட்டி பேருந்து நிலையத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,சிஐ டியு தோழர்கள் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் .கட்சியின் மாநிலக்குழு சார்பில் மாநில செயற்  குழு உறுப்பினர் கே.பாலபாரதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .விவசாயத்தொழி லாளர் சங்க மாநிலத் தலைவர்  ஏ.லாசர் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினரு மான  என்.ராமகிருஷ்ணன் உள்ளிட்  டோர் அஞ்சலி செலுத்தினர்.

இரங்கற்கூட்டம்

பின்னர் நடைபெற்ற இரங்கல்  கூட்டத்திற்கு கட்சியின் கம்பம்  ஏரியா செயலாளர் கே.ஆர்.லெனின் தலைமை வகித்தார் .மாநில செயற்குழு உறுப்பினர்  கே.பாலபாரதி ,விவசாயத்தொழி லாளர் சங்க மாநிலத் தலைவர்  ஏ.லாசர் ,மாவட்டத் தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் டி.வெங்கடேசன் , ஜி.எம்.நாக ராஜன் , விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் , மாவட்ட செயலா ளர் டி.கண்ணன் , சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜி.சண்முகம் ,வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் சி. முனீஸ்வரன் ,மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலை வர் எஸ்.ராமச்சந்திரன் ,ஓய்வு பெற்  றோர் சங்க நிர்வாகி பி.ஜெயன் ,ஆசி ரியர் சுப்பிரமணி,திமுக பிரமுகர் பார்த்திபன்  உள்ளிட்டோர் அன்னா ரது நினைவுகளை எடுத்துக் கூறி னர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி,முருகன் மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

சிஐடியு அஞ்சலி 

சிஐடியு  மாவட்ட தலைவர் டி . ஜெயபாண்டி தலைமையில் க.  புதுப்பட்டி பேருந்து நிலையத்திலி ருந்து 100க்கும் மேற்பட்டோர் ஊர்  வலமாக புறப்பட்டு அவரது இல் லத்தில் ‘தோழர் முருகேசன் உட லுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் சுமைப்பணி சங்க மாநில துணைத் தலைவர் ஏ .பிச்சைமுத்து. மாவட்ட செயலாளர் எம்.இராமச்சந்திரன் மாவட்ட பொருளாளர் ஜி.சண்  முகம், மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநில துணை தலைவர் எஸ். ராமச்சந்திரன்  அரசு போக்கு வரத்து திண்டுக்கல் கோட்ட பொதுச் செயலாளர் என்.ராம நாதன், துணை பொது செயலாளர் மணிகண்டன், ஓய்வுபெற்ற மின்  ஊழியர் சங்க மாநில துணை  தலைவர் சந்திரசேகர் ,போக்கு வரத்து (ஓய்வு) பாலையா, அரசு ஊழியர் (ஓய்வு) கே ..துரைராஜ், மாதர் சங்க தலைவர்கள் .சித்ரா, எஸ். வெண்மணி மற்றும் பலர்    பங்கேற்றனர்.