பழனி, ஏப்.6- பழனி தண்டாயுதபாணி கோயில் அனைத்து சிகை தொழி லாளர்களின் பேரவை கூட்டம் நடைபெற்றது. சிகைத் தொழிலாளர் சங்க தலைவர் கே.தங்கவேல் தலைமை வகித்தார். பொருளா ளர் சரவணன், செயலாளர் நாட் ராயன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் பேராசிரியர் சோ. மோகனா, சிஐடியு கன்வீனர் பிச்சை முத்து, பி.கே.முருகேசன் ஆகியோர் பேசினர். இதில், தமிழக அரசு அனை த்து தண்டாயுதபாணி கோயில் சிகை தொழிலாளர்களையும் நிரந் தர ஊழியர் ஆக்கி, மாத ஊதியம் வழங்க வேண்டும், உரிமம் மாறு தலை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். ஏப்ரல் 19 அன்று கோயில் நிர்வாக அதி காரியிடம் கோரிக்கை மனு கொடுக்கும் இயக்கம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.