வெண்மணி தியாகிகள் தினம் மற்றும் தோழர் அந்தோனி நினைவு தினத்தை முன்னிட்டு ஈத்தாமொழியில் ஞாயிறன்று அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சிஐடியு ஒன்றிய கன்வீனர் எஸ்.டி.ராஜ்குமார் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் என். முருகேசன் துவக்கி வைத்தார். ஆட்டோ சங்க தலைவர் சிவகோபன் , விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் பேசினர். இதில் மிக்கேல் நாயகி, தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.