கடமலைக்குண்டு, மே 21- பருவநிலை மாற்றத்தால் தேன் உற் பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கரட்டுப்பட்டி பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் பழங்குடி யின மக்களுக்கான தொகுப்பு வீடுகள் அமைந்துள்ளன. இங்கு 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இந்த தொகுப்பு வீடுகளுக்கு அருகில் உள்ள மலைப்பகுதிகளுக்கு சென்று தேன், கிழங்கு சேகரிப்பது பிரதான தொழிலாக பழங்குடியினர் செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தினர் பழங்குடியின மக்க ளின் வருவாய்க்காக 30க்கும் மேற்பட்ட தேன் பெட்டிகள் அமைத்து கொடுத்தனர். மேலும் தேனீ வளர்ப்பு மற்றும் பெட்டிகள் பராமரிப்பு தொடர்பான பயிற்சிகளும் வழங்கினர். இதையடுத்து பழங்குடியின மக்கள் தேன் சேகரிப்பிற்காக மலைப்பகுதிக்கு செல்லாமல் தேன் பெட்டிகளை பராமரித்து வந்தனர். இந்நிலையில் வெயில் அதி கரிப்பு, மழையின்மை உள்ளிட்ட பருவ நிலை மாற்றங்களினால் பெரும்பாலான பெட்டிகளில் தேன் உற்பத்தியாகவில்லை. இதனால் வருமானத்திற்காக தேன் பெட்டி களை பராமரித்து வந்த பழங்குடியின மக்க ளுக்கு தற்போது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சி யுள்ளது. மேலும் வருவாய் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இது தொடர்பாக பழங்குடியின மக்கள் கூறுகையில், மலைப்பகுதிகளுக்கு சென்று தேன் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தால் போதிய அளவில் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால் தேன் பெட்டிகளை நம்பி பழங்குடி யின மக்கள் யாரும் மலைப்பகுதிக்கு செல்லாத காரணத்தினால் தற்போது வரு வாய் பாதிப்படைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழங்குடியின மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும் பழங்குடியின மக்களின் வருவாய்க்காக மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.