அறந்தாங்கி, அக்.25 - “புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி கூத்தாடி வயல் பகுதியில் வசித்து வருபவர்கள் நரிக்குறவ இன மக்கள். இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றியும் நிரந்தர தொழில் இல்லா மலும் வாழ்ந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, இவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை காக்க கடைகள், வீடுகள் தோறும் புராண நாய கர்களின் வேடம் அணிந்து உதவி கேட்டு செல்வார்கள். யாரிடம் கேட்கலாம், யாரிடம் கேட்கக் கூடாது என்பதெல்லாம் தெரி யாதவர்கள் இம்மக்கள். இந்நிலையில், அறந்தாங்கி குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி தீபா வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்று உள் ளார்கள். அவர்களிடம் நீதிபதி, “எதற் காக வந்தீர்கள்” என்று கேட்டதற்கு, “நாங்கள் தீபாவளி காசு கேட்டு வந்துள்ளோம்” என கூறியுள்ளனர். அதற்கு நீதிபதி, “அப்படியா.. நீங்கள் யார்” என்று கேட்டிருக்கிறார். “நாங்கள், நரிக்குறவர்கள்” என்று இம்மக்கள் சொல்லியிருக்கிறார்கள். மேலும் நீதிபதி, “இது என்ன வேஷம்?” என்ற தற்கு, “ஆட்டமாடி பாட்டுப் பாடி வரும் காசில் தீபாவளிக்கு துணிமணி எடுப்போம் சாமி” என்றுள்ளனர். பின்னர் நீதிபதி அங்கு ஒரு இடத் தில் உட்காரச் சொல்லி இருக்கிறார். சிறிது நேரத்தில் அறந்தாங்கி காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் அவருடன் சில காவலர்களும் வந்துள்ளனர். அவர்கள், நரிக் குறவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மதியம் 2 மணிவரை உட்கார வைத்து, பின்னர் தொடர்ந்து 10 நாட்கள் காவல் நிலையம் வந்து, தினமும் காலை 10 மணிக்கு, கையெழுத்து போட வேண்டும் என்று கூறி, அவர்களை காவல் நிலையத்தில் இருந்து அனுப்பியுள்ள னர். நரிக்குறவர் மக்களும் தொடர்ந்து மூன்று நாட்கள் கையெழுத்து போட்டுள் ளனர். வழக்கு ஏதும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக இது நடந்துள் ளது. இச்சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், அதிகார தரப்பினர் தாங்கள் செய்த தவறை மறைக்க, நரிக் குறவர்கள் மீது மேலும் புதிய பொய் களை பரப்பி வருகிறார்கள். நீதிமன்ற காவலரை தள்ளிவிட்டதாகவும், உடும்பு திருடியதாகவும் நரிக்குறவர்கள் இருவர் மீது வழக்கு இருப்பதாகவும், நிபந்தனையின் பேரில் கையெழுத்து போடுவதாகவும், நீதிபதியிடம் ரூ. 2 ஆயிரம் கேட்டதாகவும் பெயர் குறிப் பிடாமல் தகவலைப் பரப்பியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்த கட்சி யின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், “நரிக்குறவர்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல் உண்மையானது. அவர் களின் வழிபாட்டு தெய்வமான கருப்ப சாமியின் வழிபாட்டு பொருட்கள் காவல் நிலையத்தில் பறித்து வைக்கப்பட்டுள் ளன. வழக்கு ஏதும் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அலைக்கழிக்கப்பட்டுள் ளனர். தங்களை காப்பாற்றிக் கொள்ள, அதிகார தரப்பினர் நடந்தவற்றை, மறைத்து பூர்வகுடி மக்களை இழிவு படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இச்சம்பவத்தில் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.