மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தன்று கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சரண் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.