districts

img

குமரி, நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 30- கன்னியாகுமரி மாவட்டம் எஸ்எஇடிசி நாகர்கோவில் பணி மனையில் சிஐடியு சார்பில் தொழி லாளர் நலன் சார் கோரிக்கை களை தமிழ்நாடு அரசுக்கு வலி யுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெறும் தொழிலாளர் களின் ஓய்வு கால பணத்தை ஓய்வு  பெறும் அன்றே வழங்கிட வேண்  டும். ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே பேசி முடிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஓய்வுபெற்றோரின் அகவிலைப் படியை (டி ஏ)மறுக்காமல் உடனே  வழங்கிட வேண்டும். எஸ்இடிசியில் நிலுவையில் இருக்கும் 2000 காலி பணியிடங்களை உடனே நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் பணிமனை தலைவர் சிவா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்கம் சிஐடியு மாநில துணைத் தலைவர் டி எஸ்.  ஜான் ராஜன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பொன். சோபன்  ராஜ், பணிமனை உதவிச் செயலா ளர் பகவதியப்பன் உள் ளிட்டோர் பேசினர். திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை யில் தாமிரபரணி டெப்போ முன்பு சிஐடியு மற்றும் ரேவா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு  அரசு போக்குவரத்து கழக தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் காம ராஜர் தலைமை தாங்கினார். சிஐ டியு பாலசுப்பிரமணியன், சங்கிலி  பூதத்தான், ரேவா மாரிமுத்து, சுப்  பையா அபூபக்கர் நடராஜன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர், சிஐ டியு மாநில குழு உறுப்பினர் எஸ். பெருமாள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார், கோரிக்  கையை விளக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிஐடியு மண்டல பொதுச் செயலாளர் ஜோதி, ஒய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில குழு உறுப்பினர் பழனி  ஆகியோர் பேசினர். ஓய்வு பெற் றோர் அமைப்பின் நெல்லை மண்  டல பொதுச் செயலாளர் முத்து கிருஷ்ணன் நிறைவுரையாற்றி னார். சிஐடியு உதவி தலைவர் மணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் உதவித் தலைவர் மரியஜான் ரோஸ், தங்க துரை,ஜோன்ஸ் எட்வர்டு ராஜ் நம்பி ராஜன், சுரேஷ், ரேவா முத்தையா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை

இதே கோரிக்கையை வலி யுறுத்தி வண்ணார்பேட்டை விரைவு போக்குவரத்து கழக பணி மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் அமைப்பு மாவட்டத் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கி னார். துணை பொதுச் செயலாளர் சுதர்சிங் முன்னிலையில் கோரிக் கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி வடிவேல், அரசு விரைவு போக்கு வரத்து கழக பனிமனை-2 செய லாளர் சரவணகுமார், எஸ்இடிசி மத்திய சங்க உதவி தலைவர் அருண், எஸ்இடிசி உதவி மேலா ளர் ஓய்வு பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  பணிமனை-1 செயலாளர் முருகன்  நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.