விருதுநகர், மார்ச் 6- தமிழ்நாடு அரசு, பட்ஜெட் டில் நிதி ஒதுக்கி, போக்கு வரத்து கழகத்தின் வர வுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் தினத்தில் பணப் பலன்களை வழங்க வேண் டும். 2003-ஆம் ஆண்டு ஏப். 1-ஆம் தேதிக்குப் பின் பணி யில் சேர்ந்த தொழிலாளர் களுக்கும் பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியு றுத்தி அரசுப் போக்குவரத்து தொழிலாளர் (சிஐடியு)சங் கம் சார்பில் இரு சக்கர வாக னப் பிரச்சாரம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை பணி மனை முன்பு துவங்கிய பிரச்சாரம் விருதுநகர் வழி யாக, சாத்தூர், சிவகாசி, இராஜபாளையம், திரு வில்லிபுத்தூர் வழியாகச் சென்று வத்திராயிருப்பில் நிறைவடைந்தது. விருதுநகர் பணிமனை முன்பு நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு மண்டலத் தலை வர் ஏ.சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜி. வேலுச்சாமி, கோரிக்கை களை வலியுறுத்தி பொதுச் செயலாளர் எம்.வெள் ளைத்துரை, எஸ்.பாலசுப்பி ரமணியன், எம்.கார்மேகம் ஆகியோர் பேசினர்.