திருப்பூர், நவ. 22 - அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்க ளின் ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றி மூன்று மாதங்களாகியும் ஒப்பந்த சரத்துகளை அமல் படுத்தாதது உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் அரசுப் பேருந்து பணிமனை முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண் டல தலைவர் கந்தசாமி தலைமை ஏற் றார். இந்த முற்றுகை போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜி. சம்பத் உரையாற்றினார். இந்த முற்றுகை போராட்டத்தை வாழ்த்தியும், விளக்கியும் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாரன் பேசினார். ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கான பலன்களை வழங்காமல் இருப்பதை உடனடியாக கொடுக்க வேண்டும், தற்போது பணியாற்றி ஓய்வு பெறக்கூடிய தொழிலாளர்களை வெறுங் கையுடன் அனுப்பக் கூடாது. அவர்களுக்கு உரிய கிராஜிட்டி உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தம் நிறை வேற்றி மூன்று மாதங்கள் ஆகியும் அதன் சரத்துகள் இன்னும் அமல்படுத்தாமல் உள்ளதை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் விளக்கிக் கூறினார். மண்டலப் பொதுச் செயலாளர் பி.செல்ல துரை, பொருளாளர் என்.சுப்பிரமணி, துணை பொதுச் செயலாளர் வி.விசுவநாதன், கே. கொங்குராஜ் மற்றும் நிர்வாகிகள் போராட் டத்தை விளக்கி பேசினர். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் என்.சுப்பிரமணி, கே.ரவிச்சந்திரன் ஆகியோரும் இந்த முற்று கையின் நோக்கத்தை விளக்கி பேசினர். இந் தப் போராட்டத்தில் பெண்கள் உட்பட 500க் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.