விருதுநகர், மார்ச் 16- மாற்றுத் திறனாளிகள் முகாமை விட்டு மருத்துவர்கள் திடீரென வெளியேறியதால் அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன் கிழமை தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்தும் ஏராளமான மாற்றுத் திறனாளி கள் கலந்து கொள்கின்றனர். அவர் களது உடலில் உள்ள குறை களை மருத்துவர்கள் நேரடியாக கண்டறிந்து அதன் தன்மையை அறிந்து அவர்களுக்கான அடை யாள அட்டையை வழங்கி வரு கின்றனர். இந்நிலையில், வழக்கம் போல மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான மாற்றுத்திற னாளிகள் அடையாள அட்டை பெறுவதற்காக வரிசையாக காத் திருந்தனர். மார்ச் 16 அன்று மதி யம் 12 மணிக்கு அனைத்து மருத்து வர்களும் எதுவும் கூறாமல் முகாமை விட்டு திடீரென எழுந்து சென்று விட்டதாக கூறப்படுகி றது. இதனால், அதிர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளிகள் இது குறித்து மருத்துவமனை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண் டனர். ஆனால், எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மருத்துவமனை வளா கத்தின் வெளியே கூடிய அனைத்துவகை மாற்றுத் திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனைத்து மருத் துவர்களும் முகாம் நடைபெற்ற இடத்திற்கு வந்து அடையாள அட்டைக்கான பணியை தொடர்ந்தனர். இப்போராட்டத்தில் மாவட் டத் தலைவர் குமரேசன், மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் கே. ஆரோக்கியராஜ், பி.அன்புச்செல் வன் உட்பட பலர் பங்கேற்றனர்.