districts

img

பெருந்தொற்றுக்கு பின்னர் சுற்றுலா வளர்ச்சி

சென்னை, பிப். 25- பொதுமக்கள் சுற்றுலா செல்வது பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டி யுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்நாட்டுப் பயணம் முன்னெப்போதும் கண்டி ராத உயர்வைக் கண்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது கடந்த மாதம்  கிட்டத்தட்ட  இரு மடங்காக அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத் தில் 125.42 லட்சம் பயணிகள் சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 64.08  லட்சமாக இருந்தது.   இந்தியா விரைவில் உலகப் பயணத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது - இந்தியாவில் பல கண்காட்சிகள் மாநாடுகள் நடைபெறுவதால் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  சென்னை வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.24)  தொடங்கிய பயணம் மற்றும் சுற்றுலா  (டிடிஎப்) தொடர்பான கண்காட்சியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஞாயிறன்று (பிப்.26) நிறைவடையும் இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, ஆந் திரா, கர்நாடகா, கேரளா, கோவா,  ஜம்மு- காஷ்மீர் உள்பட  பல்வேறு மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் வசதிகள் விளக்கப்படுகின்றன.  இந்த கண்காட்சியை தமிழக  சுற்றுலா மற்றும் கலாச்சார துறை யின் முதன்மை செயலர் சந்திர மோகன் தொடங்கிவைத்தார்.  பயணம் மற்றும் சுற்றுலா தொடர் பான சென்னை கண்காட்சி  தென்னிந்தியாவின் மிகப்பெரிய பயண வர்த்தக கண்காட்சியாக மாறியுள்ளது.