districts

img

விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி

 ஒட்டன்சத்திரம், மார்ச் 11-  இடையக்கோட்டை பகுதியில் விலை வீழ்ச்சியால்  தக்காளியை சாலையோரம் கொட்டும் அவலம் ஏற் பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடை யக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம், பொரு ளூர், அம்பிளிக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 14 கிலோ கொண்ட பெட்டி தரத்திற்கு ஏற்ற வாறு ரூ. 250 வரை வியாபாரிகளால் வாங்கப்பட்டு வந்தது.  தற்போது அதிகவரத்தால் படிப்படியாக விலை குறைந்து வருகிறது.   இதனால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயி கள் மிகவும் அதிர்ச்சியடைந்து மன வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.  இதுகுறித்து தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயி கள் கூறுகையில், எங்கள் பகுதியில் தற்போது தக்காளி  சாகுபடி நடைபெற்று வருகிறது.  தக்காளி பழங்களை பறிப்பதற்கான கூலியை கூட, தக்காளி பழங்களை விற்பனை செய்யும்போது கிடைப்பது இல்லை. நோய்  தாக்குதலுக்கு மருந்து தெளித்தல், பறிப்பு கூலி, லாரி  வாடகை என்று கணக்கு பார்த்தால் கட்டுப்படியாக வில்லை.  தற்போது  விலை இல்லாத காரணத்தால் தக்காளி  பழங்கள் சாலையோரம் கொட்டப்படுகின்றன என்று தெரி வித்தனர்.