districts

img

இடையக்கோட்டை வாரச்சந்தைக்கு கட்டிடம் கட்டி கடைகள் அமைத்துத்தர கோரிக்கை

ஒட்டன்சத்திரம், பிப்.18-  100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடையக்கோட்டை வாரச்சந்தையில் கட்டி டங்கள் கட்டி கடைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் அருகே  உள்ள இடையகோட்டை யில் நங்காஞ்சி ஆற்றின் ஓரத்தில் 100 ஆண்டுக்கு மேல் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற கிராமப்பகு திகளில் இருந்து விவசாயி கள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்தும், வியாபாரிகள் மொத்தமாக காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து விற்பனையும் செய்து வருகின்றனர். ஆனால், இந்த வாரச் சந்தை திறந்தவெளியில், குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் ஏதுமின்றி செயல்பட்டு வருகிறது. எனவே, ஊராட்சி நிர்வா கம் சந்தையில் குடிநீர் உள்  ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்தி கொடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்  கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.