திருவில்லிபுத்தூர், ஜூலை 28- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேர் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு திருவில்லி புத்தூர் முழுவதும் ஏராளமான வெளியூர் வெளி மாநில பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் .இந்த நிலையில் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவின் ஐந்தாம் நாளான ஜூலை 28 அன்று பெரியாழ்வார் மங்கள சாசனம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் தலை மையில் ஸ்தானிகம் ரெங்கராஜன் ,கோயில் மணியம் கோபி ஆகியோர் செய்தனர் .ஆண்டாள் ஆடிப்பூர திரு விழாவில் மங்கள சாசனம் மற்றும் கருட சேவை நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை அறநிலையத்துறை இணை ஆணை யர் செல்லத்துரை, கோவில் தக்கார் ரவிச்சந்திரன் ,செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்தனர்.