மதுரை, ஜன.7- தினமணி நாளி தழின் திருநெல வேலி மாவட்ட புகைப்படக் கலை ஞராகப் பணி யாற்றியவர் விஜய குமார் (48). உடல் நலக் குறைவின் காரணமாக வெள்ளியன்று காலை திருநெல்வேலி யில் காலமானார். மறைந்த விஜயகுமார் மதுரை, இராமநாதபுரம், சேலம் உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தின மணி நாளிதழின் புகைப்படக் கலைஞ ராகப் பணியாற்றியுள்ளார். விஜயகுமா ரின் சொந்த ஊர் வேலூர். அவரது உடல் வெள்ளிக்கிழமை இரவு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக மதுரை கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு பல்வேறு பத்திரி கைகளின் செய்தியாளர்கள், புகைப் படக் கலைஞர்கள், காட்சி ஊடக செய்தி யாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தினர். விஜய குமாரின் மகன் ஆகாஷிடம் பத்திரிகை யாளர்கள் தங்களது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர். தீக்கதிர் சார்பில் மதுரை மாநகர் செய்தியாளர் ஜெ.பொன் மாறன், ச.நல்லேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.