districts

பிளஸ்-2 பொதுத் தேர்வு மதுரை மாவட்டத்தில் 37,457 பேர் எழுதுகிறார்கள்

தேர்வெழுதும் மாணவர்களுக்கு டிப்ஸ்

தேர்வுகள் குறித்து மதுரை மாவட்ட முதன்  மைக் கல்வி அலுவலர் கே.கார்த்திகா கூறுகையில்,  கடந்த மாதம் மெதுவாகக் கற்கும் மாண வர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, கடின மாக இருக்கும் பாடங்களை எளிதாகக் கற்றுக கொள்வது குறித்து வழிகாட்டப்பட்டது.தேர்வுகள் குறித்து மதுரை மாவட்ட முதன்  மைக் கல்வி அலுவலர் கே.கார்த்திகா கூறுகையில்,  கடந்த மாதம் மெதுவாகக் கற்கும் மாண வர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, கடின மாக இருக்கும் பாடங்களை எளிதாகக் கற்றுக கொள்வது குறித்து வழிகாட்டப்பட்டது.

தேவை அமைதியான சூழல்

“நள்ளிரவு வரை படிக்க வேண்டுமென மாண வர்களை அறிவுறுத்தக் கூடாது. 7 மணி முதல்  8 மணிநேர தூக்கம்  அவசியம். கடைசி நிமிடத்  தயாரிப்பு தேர்வுக் கூடங்களில்  மாணவர்கள் போதி யம் கவனம் செலுத்துவதை தவறவிட வாய்ப்புள் ளது. மாணவர்களுக்கு வீட்டில் அமைதியான சூழல் நிலவுவதற்கு பெற்றோர்கள் உதவ வேண்டும். 

தவிர்க்க வேண்டியது  டிவியும்-செல்போனும்

ஓய்வு என்ற பெயரில் மாணவர்கள் அதிக நேரம்  தொலைக்காட்சி அல்லது மொபைல் போன் களைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றார்.

கனிவாகப் பேசுங்கள்

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் மனநலத்துறை பேராசிரியர் கீதாஞ்சலி கூறுகை யில், தேர்வெழுதும் மாணவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும். வெற்றி நிச்சயம். அதிக மதிப்பெண் பெற வாழ்த்துக்கள் என்ற விதத்தில் அவர்களிடம்  நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டும்.   ஒரு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அதைப் பற்றி யோசிக்காமல் வரவிருக்கும் தேர்வுகளில் கவ னம் செலுத்த வேண்டும் என்றார்.  தேர்வர்களுக்கு கட்டணமில்லா ஹெல்ப் லைன் ‘14417’  அறிவிக்கப்பட்டுள்ளது. மாண வர்கள் தேவையான ஆலோசனை-உதவிகளை இதில் தொடர்பு கொண்டு பெறலாம்.

மதுரை, மார்ச் 12- 12 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு  மார்ச் 13 ஆம்  தேதி முதல்  ஏப்ரல்  3 ஆம் தேதி வரையும், 11 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14  முதல் ஏப்ரல் 5 வரையும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு  பொதுத் தேர்  வில் 323 பள்ளிகளைச் சார்ந்த மாண வர்கள் 18734 பேரும், மாணவி யர்கள் 18723 பேரும் ஆக மொத்தம் 37457 பேரும் 116 தேர்வு மையங்க ளில் தேர்வெழுதவுள்ளனர்.  11 ஆம் வகுப்பு பொதுத் தேர்  வில் 326 பள்ளிகளைச் சார்ந்த மாண வர்கள் 17056 பேரும் , மாணவி யர்கள் 18223 பேரும் ஆக மொத்தம் 35279 பேரும் 116 தேர்வு மையங்க ளில் தேர்வெழுதவுள்ளனர். இப்பொதுத் தேர்வில்  முதன்மைக் கண்காணிப்பாளர் கள், துறை அலுவலர்கள் அறைக் கண்காணிப்பாளர்கள். நிலையான படை  உறுப்பினர்கள் என 3400 தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.  8 ஆய்வு அலுவலர்கள்  தலை மையில் சிறப்பு பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்  யப்பட்டு இத்தேர்வினை கண்கா ணிக்க உள்ளனர் .  இவ்வாண்டு 352 மாற்றுத்திற னாளிகள் மாணவ / மாணவி யர்களில், கண்பார்வை குறை யுள்ள / மனவளர்ச்சி குன்றிய மற்றும் கை ஊனமுற்ற 80 மாணவ / மாணவியர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் ( Scribe ) நிய மனம் செய்யப்பட்டுள்ளனர் . இவ்வாண்டு 4 மையங்களில் தனித்தேர்வர்கள் 1231 பேர் தேர்வெ ழுதவுள்ளனர்.  மேல்நிலை பொதுத் தேர்விற்கு உறங்கான்பட்டி  அரசு மேல்நிலைப் பள்ளி புதிய தேர்வு  மையமாக அரசுத் தேர்வுத் துறை யால் அறிவிக்கப்பட்டுள்ளது.