districts

img

காலமானார்

நாகர்கோவில், நவ. 2- திற்பரப்பு பேருராட்சி பணி யாளரும் தமிழ்நாடு பேருராட்சி ஊழியர் சங்கத்தின் குமரி மாவட்ட தலைவருமான சந்திர னின் தாயார் கோமதிஅம்மா நவம்பர் 2 புதனன்று காலமா னார். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி மாலை 3 மணியளவில் குலசேக ரம் கொச்சு வீட்ட பாறையில் உள்ள வீட்டில் நடைபெற்றது. இவர் கட்சியின் முன்னணி ஊழியராக செயல்பட்டு மறைந்த சகாவுகேசவனின் மனைவியா வார். இவருக்கு நடராஜன், கட்சி உறுப்பினரான ரெவி உள்ளிட்ட 7 பிள்ளைகள் உள்ளனர் கோமதி அம்மாவின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.வி.பெல்லார்மின், எம். அண்ணாதுரை, எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், குலசேகரம் வட்டார செயலாளர் பி. விஸ்வம்பரன், விவசாயிகள் சங்க வட்டார தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.