இராஜபாளையம், மே 30- இராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், ரயில்வே மேம்பாலப் பணி என மூன்று திட்டங்களும் 2018- ஆம் ஆண்டு தொடங் கப்பட்டது. ஏறக்குறைய நான்கு ஆண்டு கள் நிறைவடைந்தும் இப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலையில் இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நகர் மன்றத் தலைவர், திட்டப் பணிகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தாமிரபரணித் தண்ணீர் வராமலேயே தாமிரபரணி தண் ணீருக்காக உயர்த்தப்பட்ட கட்டணத் தின் ஒரு பகுதியை குறைத்து தீர்மானம் நிறைவேற்றி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடம் அனுமதி வாங்கு வது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தாமிரபரணி குடிநீர்த் திட்டப் பணி களை 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிப்பது எனவும் தீர்மானம் போடப் பட்டுள்ளது.
தாமிரபரணி குடிநீர்த் திட்டப் பணி களுக்கான ஒப்பந்தத்தில் 2020-ஆம் ஆண்டு பணியை முடித்து தாமிரபரணி தண்ணீர் கொடுப்பது என்று தீர்மானிக் கப்பட்டிருந்தது. ஒப்பந்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் ஏழு மாதம் அவகாசம் அளிப்பது பொது மக்களை ஏமாற்றுவதற்காகவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக கட்டப்பட் டுள்ள மலையடிபட்டி நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஐந்து நாட்க ளுக்கு ஒரு முறை மலையடிப்பட்டி மக்க ளுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை நடைமுறைக்கு வர வில்லை. பாதாளச் சாக்கடை திட்டப் பணி கள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து தீர்மானத்தில் குறிப்பிடப்பட வில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை 2020-ஆம் ஆண்டுக்குள் முடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதே வேகத்தில் நடைபெற்றால்...? இராஜபாளையம் மக்களுக்கு தீபா வளிப் பரிசாக மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப் பார் எனக் கூறியுள்ள இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் எண்ணம் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந் துள்ளது. தாமிரபரணி குடிநீர்த் திட்டம், பாதா ளச் சாக்கடைத் திட்டம், இரயில்வே மேம்பாலப் பணிகள் ஆகியவற்றை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட் டிற்கு வழங்க வேண்டும்.