சிவகங்கை, ஜன.18- சிவகங்கை மாவட்டம் நாட்டர சன்கோட்டையில் கண்ணாத்தாள் கோவி லில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து கொண்டாடினர். இவ்விழாவில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் வெளி நாட்டினரும் பங்கேற்றனர். வெளிநாட்டி னர்க்கும்,கலைக்குழு கலைஞர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார். இவ்விழாவினை முன்னிட்டு சுற்றுலா திருவிழாவாக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பாக கொண்டாடப்பட் டது. இரவு முழுவதும் கோயில் திருவிழா நடைபெற்று அங்கு கோயில் பூஜைகள் நடந்தது.தங்கரதம் இழுத்தனர்.விழாவில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், செய்திமக்கள் தொடர்பு அலு வலர் சண்முகசுந்தரம், ஏபிஆர்ஒ ராஜ செல்வன், தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், நாட்டரசன்கோட்டை பேரூ ராட்சித் தலைவர் பிரியதர்ஷினி கவிராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமுரு கன், சுற்றுலாத்துறை உதவி அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.