தூத்துக்குடி, ஜூலை 29 தூத்துக்குடியில், பாதயாத்திரை பக்தர்களுக்காக ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி அவசர பொதுக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. மாநக ராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிதா செல்வ ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது “திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக செல்கி றார்கள் விழாக் காலங்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு உப்பாற்று ஓடை அருகே சுமார் 2.5 ஏக்கரில் ஓய்வறை பூங்கா கட்டப்பட உள்ளது. இதில் பக்தர்களுக்கு தூங்குவதற்கான இடம், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது என்றார். இதனை அனைத்து உறுப்பினர்களும் மேஜை தட்டி வரவேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தெரி்வித்தனர். மேலும், பக்கிள் ஓடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். இதனை அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண்டும். மழை காலத்திற்காக முன்பாக பக்கிள் ஓடை தூர்வாரப்படும். தூத்துக்குடியில் உள்ள ஆஷ் துரை நினைவு மண்டபத்தை ஆண்டுதோறும் மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. ஆனால் இதனை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இதில் அரசியல் செய்பவர் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி சார்பில் 5 லட்சம் மஞ்சப்பைகள் பொதுமக்களுக்கு இலவச மாக விநியோகம் செய்யப்பட உள்ளது என மேயர் தெரிவித்தார். பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன. தூத்துக்குடி மேலப் பெரிய காட்டன் ரோட்டில் மாநகராட்சி சார்பில் 10 கடைகள் கட்டப் பட்டுள்ளன. இந்த கடைகளை ஏலம் விடுவதற்கு திமுக கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக தீர்மானம் ரத்து செய்யப் பட்டது. கூட்டத்தில் மழைநீர் வடிகால், சாலைப் பணிகள் உட்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.