districts

img

உரிய காலத்தில் இழப்பீடு வழங்கவில்லை

கோவை, பிப்.7- விபத்தில் சிக்கியவருக்கு உரிய  காலத்தில் இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கார்  மற்றும் உபகரணங்களை பறிமுதல்  செய்ய வந்த நீதிமன்ற ஊழியர் களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் சத்திய மூர்த்தி மற்றும் முரளி  கிருஷ்ணன். இவர்கள் இருவரும்  கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் சேலத்தில் இருந்து இரு  சக்கர வாகனம் மூலமாக வால்பாறை  சென்று கொண்டிருந்தனர். அப் போது எதிரே வந்த வனத்துறைக்கு சொந்தமான ஜீப் மோதியதில் சத்திய  மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். முரளி கிருஷ்ணன் படுகாயங் களுடன் கோவையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இந்த விபத்தில், இழப்பீடு கோரி  சத்திய மூர்த்தியின் குடும்பத்தினர் மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகியோர்  கடந்த 2012ஆம் ஆண்டு தனித்தனி யாக சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதாடிய நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு வந்தது.  அதில், கோவை மாவட்ட ஆட்சி யர், வனத்துறை மற்றும் வனத்துறை  வாகன ஓட்டுநர் ஆகிய மூன்று பேரும்  இரு தரப்பிற்கும் சேர்த்து மொத்தம் 51 லட்சம் இழப்பீடு தொகையை 7.5  சதவிகித வட்டியுடன் ஒரு மாத காலத் திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, எதிர் தரப் பினர் சென்னை உயர் நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய்ததில் ரூ. 5 லட்சம் மட்டும் குறைவாக இழப்பீடு  வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் இருந்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவா ரணம் வழங்கப்படவில்லை. இதனி டையே பாதிக்கப்பட்டவர்கள் கோவை 4ஆவது கூடுதல் மாவட்ட  நீதிமன்றத்தில் கடந்த 2020ஆம்  ஆண்டு நிறைவேற்றும் மனுவை  அளித்தனர். வழக்கை விசாரித்த  நீதிமன்றம், இழப்பீடு தொகைக் கான பொருட்களை கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஜப்தி செய்ய உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப் பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.  அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள கார், கணினிகள், டேபிள்கள்  மற்றும் சேர்  ஆகியவற்றை பறிமுதல்  செய்ய உள்ளதாக ஆட்சியர் அலுவ லக பணியாளர்களிடம் தெரிவித் தனர். அதிர்ந்து போன பணியாளர்கள்  50 சதவிகித டெபாசிட் தொகையை  நீதிமன்றத்தில் செலுத்திவிட்டதாக வும், ஒரு சில தினங்களில் மீத  பணத்தைக் கொடுத்துவிடுவ தாகவும் தெரிவித்தனர். சுமார் 2 மணி  நேரத்திற்கு மேல் ஆட்சியர் அலுவ லக பணியாளர்கள், நீதிமன்ற பணி யாளர்களை சமாதானப்படுத்தினர்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப் பீடு வழங்காததால் ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள பொருட்களை வழக்கறிஞர்கள் பறிமுதல் செய்ய வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.