districts

img

இங்கிலீஷ் கால்வாயில் 72 கிலோ மீட்டர் நீந்தி தேனி சிறுவன் சாதனை

தேனி, ஜூலை 20- இங்கிலீஸ் கால்வாயில் 72 கிலோ மீட்டர் நீந்தி தேனி யைச் சேர்ந்த சிறுவன் சாதனை  படைத்துள்ளார். இவருக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு பாராட்டுச் சான்றி தழ் வழங்கியுள்ளது. தேனியை சேர்ந்தவர் நீதி ராஜன். இவருடைய மகன்  சிநேகன் (15). இந்தச் சிறு வன் தேனி மாவட்ட விளை யாட்டு அரங்கில் உள்ள தமிழ்  நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீச்சல் குளத்  தில் கடந்த 2015-ஆம் ஆண்டு  முதல் மாவட்ட நீச்சல் பயிற்சி யாளர் விஜயகுமாரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.  இந்த நிலையில் தற் போது நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் சிறுவன் சினேகன் உள்பட ஆறு பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் இங்கிலாந்து சென்  றனர்.  அங்கு கடந்த 18-ஆம் தேதி டோவர் சாம்பியன் ஹோ பீச்சிலிருந்து இந்திய அணியின் சார்பாக நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் ஆறு பேர்  கொண்ட குழு இங்கிலீஷ் கால்  வாயில் நீந்தத் தொடங்கி யது. கால்வாய் மொத்த 36  கி.மீ. வழக்கமாக இங்கிலாந்  தில் இருந்து பிரான்ஸ் வரை  நீந்திச் சென்று, பின்னர் அங்கி ருந்து படகில் வந்து விடு வார்கள். ஆனால் தற்போது இங்கிலாந்திலிருந்து நீந்தி  பிரான்ஸ்-ஐ சென்றடைந்து, மறுபடியும் இங்கிலாந்து வரை 72 கி.மீ தூரத்தை சிறு வன் சிநேகன் நீந்தி கடந்த 19-ஆம் தேதி இங்கிலாந்து வந்து சாதனையை படைத்  தார். இவர்கள் குழு இந்தியா வின் முதல் அணி என்ற பெரு மையை பெற்றுள்ளது.  தமிழகத்திலிருந்து இதற்கு முன்பு குற்றாலீஸ்வ ரன் இங்கிலீஸ் கால்வாயில் நீந்தியுள்ளார். அதன் பிறகு  தேனியை சேர்ந்த சிறுவன் சிநேகன் இங்கிலீஸ் கால்  வாயை நீந்தி கடந்த இரண்டா வது தமிழர் ஆவார். இந்தச் சாதனையைப் படைக்க வித்திட்ட நீச்சல் பயிற்சியா ளர் விஜயகுமார், சிறுவன் சிநேகன் ஆகியோர்களுக்கு குளோபல் அவார்டு என்ற அமைப்பு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டியுள்ளது.