விருதுநகர், ஏப்.7- விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளி களில் தங்களது பெண் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்திட விண்ணப்பத்திற்காக இரவு முழுவதும் பள்ளியின் முன்பு பெற்றோர்கள் காத்தி ருந்தனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சாதாரண ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் சேர்க்கப் பட்டால், அங்கு அவர்களை வேறுபாட்டு டன் நடத்தும் நிலை தொடர்கிறது. மேலும், புத்தக கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் கேட்கப்படுவதால், அம்மாணவர்கள் தங்களது படிப்பை பாதியிலேயே விட்டு விட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசானது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கியது. இதையடுத்து, ஏராளமான ஏழை, எளிய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கு சேர்த்து படிக்க வைக்கின்றனர். தங்களது குழந்தைகளும் ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டுமென பெற்றோர் கள் பலர் எதிர்பார்க்கின்றனர். இதனால், இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
இந்தநிலையில், விருதுநகர் கிருஷ்ண மாச்சாரி சாலையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலை வளாகத்திற்குள் நடு நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதே நிர்வாகத்திற்குச் சொந்தமான மற்றொரு நடுநிலைப்பள்ளியானது, நகராட்சி அலு வலகத்தின் பின் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த இரு நடுநிலைப் பள்ளி களிலும், நிகழாண்டுக்கான ஆங்கில வழிக் கல்விக்கான மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 7 வெள்ளியன்று காலை வழங்கப்படும் எனவும், இரு பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 180 இடங்கள் மட்டுமே இருப்பதாகவும் தகல்கள் வெளியாகின. இதையடுத்து, ஏராளமான பெற் றோர்கள் மற்றும் உறவினர்கள், தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளை அப்பள்ளி களில் சேர்க்க, வியாழனன்று இரவே பள்ளிக் கூடங்களின் வாசலின் முன்பு வரிசையாக நின்றனர். விடிய, விடிய உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மாறிமாறி அங்கு காத்திருந்ததாகவும் தெரிவித்தனர். பின்பு, வெள்ளியன்று காலை 9 மணிக்குப்பின் பள்ளி நிர்வா கத்தினர் வழங்கிய விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர். இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் கள் கூறுகையில், நாங்கள் சாதாரண கூலி வேலை செய்பவர்கள். தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில் கட்டணம் மிக அதிகம். எங்களது வருமானத்தை வைத்து அவர்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்தி எங்களது குழந்தைகளை படிக்க வைப்பது கடினம். எனவே, அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் எங்களது குழந்தையை படிக்க வைக்க முடிவு செய்துள்ளோம். எங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இரவு முழுவதும் கால்கடுக்க காத்திருந்து விண் ணப்பத்தை பெற்றுள்ளோம். தமிழ்நாடு அரசானது, ஒவ்வொரு பள்ளியிலும் ஆங்கில வழிக் கல்விக்கான வகுப்பு களை மேலும் அதிகரிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், நீண்ட நேரம் விண்ணப்பத்திற்காக காத்தி ருக்கும் நிலை ஏற்படாது என தெரிவித்த னர்.