districts

மதுரை முக்கிய செய்திகள்

லாரியில் ஜவுளிப் பண்டல்கள் திருட்டு

அருப்புக்கோட்டை, ஜூலை 26- அருப்புக்கோட்டை அருகே ஓடும் லாரியில் ஜவுளி பண்டல்களை திருடி சென்றவர்களை போலீசர் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள  வடக்கு மயிலோடை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்  (48). லாரி ஓட்டுநரான இவர், மதுரையில் இருந்து ஜவுளி பண்டல்களை ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டை வழியாக திசையன்விளை நோக்கிச் சென்று கொண்டி ருந்தார். கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்ற  போது, லாரியின் பின்னால் யாரோ நிற்பது போல் தெரி யவே, லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு மேலே ஏறி பார்த்துள்ளார். அப்போது லாரியில் மூடியிருந்த தார்ப்பாய் கிழிக்கப்பட்டு அதில் இருந்த 2 ஜவுளி பண்டல்கள் திருடு போனது தெரியவந்தது. இதை யடுத்து, ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில், அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

அருப்புக்கோட்டை, ஜூலை 26- அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1.5 டன் சேரன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். விருதுநகர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அருப்புக்கோட்டை அருகே சேது ராஜபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாக னத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 30 கிலோ எடை கொண்ட 53 மூடைகளில் 1590 கிலோ ரேசன் அரிசி  இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்துடன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதš செŒதனர்.மேலும், வேனை ஒட்டி வந்த உரிமையாளர் விருதுநகர் அšல்லம்பட்டியை சேர்ந்த கணேஷ் குமார் (21) என்பவரிடம் விசாரித்தனர். அதில், சரக்கு வாகனமானது, மதுரை கீரைத்துறை யை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கு சொந்தமானது என  தெரிவித்தார். எனவே, கணேஷ்குமார், ஸ்ரீதேவி ஆகி யோர் மீது போலீசார் வழக்குப்பதிவு கணேஷ்குமாரை கைது செய்தனர். 

தகராறில் தங்கையின் கணவரை கொன்ற இளைஞர் தற்கொலை

தேனி, ஜூலை 26- தேனி மாவட்டம் கம்பம் கிராமச் சாவடி தெருவைச்  சேர்ந்த சகோதரர்கள் சிவக்குமார்(29), சங்கர்(27) கட்டி டத்தொழிலாளிகள். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.திங்களன்று இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சங்கர் தனது அண்ணன் சிவகுமாரை கத்தியால் குத்த முயன்றார். அப்போது சண்டையை விலக்க வந்த தங்கையின் கணவர் காளிராஜ் (32) மீது கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த காளிராஜ் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்ட சங்கர்  மைத்துனரை கொலை செய்த அதிர்ச்சியில் வீட்டில் தூக்கு  போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தொடர்பாக கம்பம் தெற்கு காவல்நிலையத்தில் காவல்  ஆய்வாளர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகிறார்.

சமத்துவபுர வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர், ஜூலை.26- சமத்துவபுரத்தில், தகுதியற்ற பயனாளிகளுக்குப் பதிலாக புதிய பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இனங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறிய தாவது: சாத்தூர் ஒன்றியம், முள்ளிச்செவல் சமத்துவபுரத் தில் ஆதிதிராவிடர் பிரிவில் 3 வீடுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் 5 வீடுகள் மற்றும் மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பில் 1 வீடு என மொத்தம் 9 வீடுகள் உள்  ளன. விருதுநகர் ஒன்றியம், செங்கோட்டை சமத்துவ புரத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 1 வீடு, மற்றும் இராஜ பாளையம் ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் சமத்துவ புரத்தில் ஆதிதிராவிடர் 5 வீடுகள், இதர பிரிவில் 19 வீடு கள் என மொத்தம் 24 வீடுகள் என மாவட்டத்தில் 34 வீடு கள் உள்ளன. அதில் குடியிருக்க தகுதியான பயனாளி கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். எனவே, பயனாளிகள், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியஅலுவலகங்களை அணுகி விண்ணப்பங்களை வரும் ஆக.5க்குள் வழங்க  வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது

கடமலைக்குண்டு, ஜூலை.26- வருசநாடு அருகே தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் கலைமோகன் (வயது 22). இவர் தும்மக்  குண்டுவில் இருந்து தேனி செல்லும் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி செல்வதாக திங்கள்கிழமை மாலை கண்ட மனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் பேருந்தில் வந்த கலைமோகனை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் சுமார் 1.5 கிலோ கஞ்சா வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மோகனை கைது செய்தனர்.

வேடசந்தூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

வேடசந்தூர், ஜூலை 27-  வேடசந்தூர் அருகே கோவிலுக்கு சென்றுகொண்டி ருந்தபோது டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் காயம் அடைந்தனர். தேனி மாவட்டம் பூசாரிகவுண்டன்பட்டியைச் சேர்ந்த 16 பேர் ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நாட்ராயன் நாச்சிமுத்து கோவிலுக்கு ஒரு வேனில் புறப்பட்டுச்சென்றனர். வேனை, பூசாரிகவுண்டன்பட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (வயது32) என்பவர் ஓட்டி வந்தார். திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பிரிவை அடுத்து வேன்  வந்துகொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக பின்பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்  தாறுமாறாக சென்று நடு சாலையில் கவிழ்ந்து. வேனை ஓட்டி வந்த பூசாரிகவுண்டன்பட்டியைச் சேர்ந்த டிரைவர் வீரக்குமார் (வயது32) மற்றும் வேனில் வந்த குணாவதி (வயது52), அருண்குமார் (வயது27), அமுதா (வயது41), போதுமணி(வயது52), பிரியதர்சினி (வயது 22), சர்வேஸ்வரன் (வயது37), மாலதி (வயது49),  ஜெயந்தி (வயது42), சீலமுத்து(வயது54) உள்ளிட்ட 15 பேர்  காயம் அடைந்து 108 ஆம்புலன்சு மூலமாக வேடசந்தூர்  அரசு மருத்துவமனையிக்கு கொண்டு வந்து சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலைத்துறை ரோந்து ஏட்டு  சாமிநாதன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து நடு  சாலையில் கவிழ்ந்த வேனை மீட்பு வாகனம் மூலம் உட னடியாக அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிலத்தரகரிடம் 16 பவுன் நகை பறித்த தீயணைப்பு காவலர் உட்பட 3 பேர் கைது

விருதுநகர், ஜூலை 26- விருதுநகர் லட்சுமி நகரில் பட்டப் பகலில் வீட்டின்  வெளியே நின்று கொண்டிருந்த நிலத் தரகரிடம் 16 பவுன்  தங்கச் சங்கலியை பறித்துச் சென்ற தீயணைப்புத்துறை காவலர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி. நிலத்  தரகரான இவர், வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தா ராம். அப்போது, காரில் அங்கு வந்த கும்பல், கந்தசாமி  கழுத்தில் இருந்த 22 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்  ளது. அவர் நகையை கையில் பிடித்துக் கொண்டு வழிப்பறிக் கும்பலிடம் கடுமையாக போராடியுள்ளார். இந்நிலையில், தங்கச் சங்கிலியில் 16 பவுன் வழிப்பறி கும்பலிடம் சிக்கியது. இதையடுத்து, அந்தக் கும்பல்  காரில் ஏறி தப்பிச் சென்றது. இதுகுறித்து கந்தசாமி, விருது நகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்  பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில்  உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்த னர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொள்  ளையர்களை கண்டுபிடித்தனர். விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியை சேர்ந்த  தீயணைப்பு துறை காவலர் திருப்பதி, விருதுநகர் மேற்கு  பாண்டியன் காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி யை சேர்ந்த அழகர்சாமி, ஆகிய 3 பேரை கைது செய்த னர். அவர்களிடம் இருந்து கொள்ளை அடித்த நகையை  மீட்டனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  தனியார் பள்ளி ஆசிரியருக்கு  2 ஆண்டு சிறை

திருவில்லிபுத்தூர், ஜூலை 26-  திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக மன உளைச்சல் கொடுத்த தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டு சிறை  தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது  சேலம் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தவர் பாலச்சந்திரன்(25 )இவர் கடந்த 2019ஆம்  ஆண்டு 17வயது சிறுமியை பாலியல் ரீதியாக மன உளைச்சலை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த புகாரின் அடிப்படை யில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  உடற்கல்வி ஆசிரியர் பாலச்சந்திரனை கைது செய்த னர். மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லி புத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கிய  நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் தனியார் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் பால சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை  தண்டனை, 4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: போட்டிகளில் வென்றவர்களுக்கு  எம்.சின்னதுரை எம்எல்ஏ பாராட்டு

புதுக்கோட்டை, ஜூலை 26 - 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பரிசு வழங்கி பாராட்டினார். 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா புதுக்  கோட்டை நகர்மன்ற வளாகத்தில் வருகிற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அத னையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. கந்தர்வகோட்டை வட்டார அளவில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா கந்தர்வ கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவிற்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.ஷப்னம் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி, தமிழ்நாடு  அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆ.முத்து குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசி ரியர் ஏ.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆண்டாள் கோவில் அருகே உள்ள கடைகளில் சோதனை

திருவில்லிபுத்தூர், ஜூலை 26- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட  திருவிழா வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு கோயில் அருகே உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வேனா உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதன் ரெட்டி அறிவுறுத்தலின்படி மாவட்ட நிய மன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடை களில் ஆய்வு செய்தனர். இதில் ரோஸ்மில்க்கில் அதிக கலர் சேர்த்த 7 லிட்டர் ரோஸ் மில்க், தடை செய்யப்பட்ட பால்தின் கவர்கள் 4 கிலோ, கெட்டுப்போன முந்திரி குருனை 3 கிலோ, பேக்கிங் செய்யப்படாத, தேதி போடாத பால்கோவா பாக்கெட்டுகள் 15 கிலோ, தெர்மாகோல் கப் 100 ஆகியவை பறிமுதல் செய்யப்  பட்டது உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய  முறையில், விதிகளை கடைப்பிடிக்காத 10 கடை களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.

குளத்தில் மூழ்கி மாணவர் பலி

தஞ்சாவூர், ஜூலை 26 -  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள  மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன் (21) புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஐடிஐ ஒன்றில் படித்து வந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், இவரது நண்பர் மஞ்சுநாதன் (19).  இந்நிலையில் திங்கள்கிழமை கீரமங்கலம் பகுதி யில் உள்ள ஒரு கோவிலில் நடந்த தேரோட்ட திருவிழா விற்காக மஞ்சுநாதன் வீட்டிற்கு மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள, தஞ்சை மாவட்டம் பேரா வூரணி அருகே உள்ள வேம்பங்குடி - பைங்கால் வீரமா காளியம்மன் கோயில் குளத்தில் குளித்தனர். இதில் நீச்சல் தெரியாததால் மணிகண்டன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

  திருநெல்வேலி, ஜூலை 26- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள  நிலையூரை சேர்ந்தவர் சரவணன். அதே பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார். உறவினர்களான இவர்கள்  2 பேரும் தங்களது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை காலை நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவில் பங்கேற்பதற்காக ரெயிலில் நெல்லை வந்து சேர்ந்த னர். அங்கிருந்து பேருந்தில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றனர். அங்கு சரவணன் மகன் கார்த்திக் (வயது 8) மற்றும் விஷ்ணு குமாரின் மகன் ஹரிஷ்  குமார் (10) ஆகிய 2 பேரும் கோவிலின் முன்பு செல்லும் தாமிரபரணி ஆற்றின் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரை யும் காணவில்லை. இதனால் சிறுவர்களின் உறவினர்கள் அந்த பகுதியில் தேடிப் பார்த்தனர். அப்போது கார்த்திக்கும், ஹரிஷ் குமாரும் தண்ணீரில் பிணமாக மிதந்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து அவரது  உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த வனத்துறை யினர் 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு அம்பை அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர்.

சிபிஎம் ஆர்ப்பாட்டம் 

தென்காசி, ஜுலை 26 ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களை கண்டித்தும், மக்களின் அடிப்படை பிரச்சனை களை தீர்க்க வலியுறுத்தியும் தென்காசி மாவட்டம் வாசு தேவநல்லூர் ஒன்றியம் தேவிபட்டணத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் சார்பில் மாலைநேர  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் கிளைச் செயலாளர்கள் தி.பூல்பாண்டியன், சே. புஷ்பம்  தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் தேவிபட்டணம் முன்னாள் பஞ்சா யத்து தலைவர் பொ.ஜெயராஜ், கட்சியின் ஒன்றியச்செய லாளர் இரா.நடராஜன்,மாவட்டக்குழு உறுப்பினர் எஸ் . சக்திவேல்,  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் க.அமல்ராஜ், வே.சுப்பிரமணியன், எம்.பி . ரவீந்திரநாத்பாரதி ஆகி யோர் பேசினர்.

ராமேசுவரம் மீனவர்கள்  வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

ராமேசுவரம், ஜூலை 26- இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி மூன்று  நாட்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்த போராட்டம் செவ்வாய்கிழமை வாபஸ் பெற்று புதன்கிழமை காலை யில் மீன்பிடிக்க செல்ல உள்ளதாக மீனவ சங்க பொதுச்  செயலாளர் என்.ஜே.போஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து  மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகுடன் 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீன வர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆகஸ்ட் 04 வரை சிறை யில் அடைக்கப்பட்டனர்.  இதனை கண்டித்தும், படகு மற்றும் மீனவர்களை விடு விக்க மத்திய.மாநில அரசுகள் நடவடிக்கை வலியுறுத்தி  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற் கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்று வந்த நிலை யில் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து செவ்வாய்கிழமை வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்று புதன்கிழமை காலையில் மீன்பிடிக்க செல்ல உள்ளதா மீனவ சங்க பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.  

வாலாந்தூர் கோவிலில் மோதல் பெண் காவலர் உள்பட 6 பேர் காயம்

மதுரை, ஜூலை 26- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி திருக்கோவி லின் குடமுழுக்கு விழா கடந்த மாதம் 10 ஆம் தேதி நடை பெற்ற நிலையில் ஜூலை 26 அன்று கோவிலின் 48வது நாள் பூஜை நடைபெற்றது. கோவிலை கும்பிடும் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட  தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில்  பெண் காவலர் மேனகா உள்ளிட்ட வாலாந்தூரைச் சேர்ந்த  மலர்விழி, பாண்டி, சங்கிலி, பாண்டி, வீர ராகவன், கல்  யாணி உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்தனர். அவர் களுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை, ஜூலை 26-  எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் சங்க தென் மண்டல மண்டல கவுன்சில் கூட்டம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற தேர்த லில் ஜோசப் சுரேஷ் ராஜ்குமார் தலைவராகவும், ஸ்ரீ பி. பிரபாகரன் மண்டல செயலாளராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். துணைத் தலைவராக ஸ்ரீ ஆர் கிரி குமார், இணைச் செயலாளர்களாக ஸ்ரீ சிவ கணேஷ், . ஸ்ரீ வி.என்.வினோத் குமார் , பொருளாளராக ஸ்ரீ பரணி தரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.