districts

img

அடிப்படை வசதி கோரி விருதுநகர் ஆட்சியரகத்தை நதிக்குடி ஊராட்சி மக்கள் முற்றுகை

விருதுநகர், மார்ச்.14- குடிநீர், தெரு விளக்கு, கழிவு நீர் வாறுகால் உள்ளிட்ட அடிப்ப டை வசதிகளை செய்து தரக் கோரி நதிக்குடி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை மார்ச் 14 திங்களன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் வெம் பக்கோட்டை வட்டத்திற்குட் பட்டது நதிக்குடி ஊராட்சி. இங்குள்ள சுப்பிரமணிய புரத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடிநீர் பற்றாக்குறை நிலவி வரு கிறது. இதனால், பொதுமக்கள் நீண்ட தூரம் குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது. மேலும், தெரு விளக்குகள் சரி வர எரிவதில்லை. குழந்தைக ளுக்கான அங்கன்வாடி கட்டி டம் உள்ளது. அதற்கு சுற்றுச் சுவர் இல்லாத காரணத்தால், பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள் ளது. எனவே, பொதுமக்கள் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் செயலரிடம் புகார் தெரி வித்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை யென கூறப்படுகிறது. இதனால், வெகுண்டெழுந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களை சமாதானம் செய்தனர். பின்பு, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடுகள் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.