சு.வெங்கடேசன் எம்.பி.பேசு கையில், மார்க்ஸ் இறந்தபின் மார்க்சியம் அழிந்துவிடவில்லை. செங்கொடி மனித சமூகத்தை பாதுகாக்கக்கூடிய கொடி என்ப தால்தான் அதை நாங்கள் தூக்கிப் பிடித்துள்ளோம். இன்றைக்கு நம் வீட்டுப் பிள்ளைகள் ஜூமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் 10 மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் வரை பணியாற்றுகிறார்கள். இவர்கள் அந்த நிறுவனத்தின் ஊழியர் கிடை யாது. யாருக்கு உழைக்கிறோம் என்று தெரியாமலே கொத்தடிமை யைப் போல் பணியாற்றிக் கொண் டிருக்கின்றார்கள். அதானி என்று கேள்வி எழுந்த உடனேயே நாடளுமன்றத்தில் மைக் ஆப் செய்யப்பட்டுவிட்டது. அதானியை பற்றி பேசவே முடி யாத சூழ்நிலைதான் அங்கு உள் ளது. இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகள் அதானிக்கு எவ்வ ளவு கடன் கொடுத்துள்ளது என்ற கேள்வியை எழுப்பிய போது, அதற்கான பதில் அவர்களிடம் இல்லை. அதற்குப்பின் அதை நாங்கள் பார்வைக்கு வைத்து விட்டோம் என்று கூறினர். ஆனால் அன்றைய கூட்டத் தொடர் முடி யும் வரை என்னுடைய பார்வைக்கு அது வரவில்லை. இறுதியாக நான் சபாநாயகர் அறைக்கே சென்று நீங்கள் பார்வைக்கு வைத்து விட்டேன் என்று சொல்கிறீர்கள் ஆனால் இப்போது வரை என்னு டைய பார்வைக்கு அது வர வில்லை என்று கூறி, நான் அங் கேயே அமர்ந்து விட்டேன். பின்பு அங்குள்ள பணியாள் ஒருவர் உங்களுடைய வாட்ஸ் அப் எண்ணை கொடுங்கள், நான் மாலைக்குள் அனுப்பி வைக்கி றேன் என்று கூறினார் பின்னர் அனுப்பி வைத்ததற்கு பின் தான் தெரிகிறது 5300 கோடி ரூபாய் எல்ஐசி மூலமாக அதானி குழு மத்திற்கு கடனாக வழங்கப் பட்டுள்ளது.
இதை எந்த ஊடக மும் வெளியிடவில்லை. எங்களு டைய அதிகாரப்பூர்வமான நாளேடு மட்டும்தான் அதை வெளியில் கொண்டு வந்தது. அப்படி இது போன்ற செய்திகளை வெளியே கொண்டு வருகிறார்கள் என்றால் அதற்குப்பின் கம்யூனிஸ்டுகளும் செங்கொடி இயக்கமும் இருக்கி றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் ஜனநாய கத்தையும் அரசியல் சாசனத்தை யும் ஆளக்கூடிய ஒன்றிய அரசு மதிப்பதில்லை. பாஜக அரசு தொடர்ந்து இரண்டு விஷயங் களை செய்து கொண்டே வரு கின்றது. ஒன்று, இந்த நாட்டின் சட்டத்தை காலில் போட்டு மிதிக் கின்றது.மற்றொன்று, பொதுத் துறை நிறுவனங்களை தனி யாருக்கு விற்பது. ரயில்வே சொத் துக்களை விற்பனை செய்யக் கூடாது. ஏனென்றால் இது இந்திய மக்களின் சொத்து. மதுரையில் விற்பனை செய்யவிடமாட்டோம் அதற்கான போராட்டம் வெகு விரைவில் நடைபெறும். கம்யூ னிஸ்டுகளாகிய எங்கள் கனவு ஒவ்வொரு மனிதனுக்கும் வேலை, ஒவ்வொரு மனிதனுக்கு மான சுயமரியாதை, ஒவ்வொரு மனிதனுக்குமான சமத்துவ உணர்வு. அப்படி எல்லா மனி தர்களுடைய உணர்வாக கம்யூ னிஸ்டுகளாகி நாங்கள் இருக் கின்றோம் என்று தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசியக்குழு உறுப்பினர் கண்ணகி பேசுகையில், மோடி தலைமையிலான அரசு கார்ப்ப ரேட்டுகளுக்கான சட்ட திட்டங் களை உருவாக்கி வருகிறது. சிறு தொழில்கள் நசுக்கப்பட்டு வரு கின்றன. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் மிகப் பெரும் நெருக்கடியை மக்கள் சந்தித்து வருகிறார்கள். ஜனநாயகத்தை பாதுகாக்க 2024 இல் இந்த பாசிச கூட்டத்தை விரட்டியடிப்போம் என்றார்.