districts

img

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 17, 18 ஆகிய இரண்டு தினங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 17, 18 ஆகிய இரண்டு தினங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு மண்டபம் கலோனியர் பங்களா அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆகஸ்ட் 5 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் .ஐ.பெரியசாமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.