முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 17, 18 ஆகிய இரண்டு தினங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு மண்டபம் கலோனியர் பங்களா அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆகஸ்ட் 5 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் .ஐ.பெரியசாமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.