மலைகளும் சடுதியில் வழிந்தோடி கடலில் கலக்கும் நதிகளும் நெடிய கடற்பரப்பும் கொண்ட குமரி மண் முக்கடலும் முத்தமிட்டு செல்லும் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. கருத்தாலும் கரத்தாலும் உழைக் கும் சாதாரண மக்கள் நிரம்பி வாழும் இந்த மண்ணில் 39 ஆண்டுகளுக்குப் பிறகு சிஐடியு மாநில மாநாடு நடை பெறுகிறது. 1989 ஆம் ஆண்டு இம்மண்ணில் சிஐடியு மாநாடு நடந்த காலகட்டம் என்பது, சுரண்டல் உலகில் அதற்கு மாற்றாக உருவான சோவியத் யூனி யனை சீரழிப்பதற்கான முனைப்பு துவங்கியிருந்தது. அந்நாட்டின் ஆதரவில் கிடைத்த தொழில் நுட்ப உதவியாலும் இந்திய மக்களின் உழைப்பாலும் வளர்முக நாடாக பரி ணமிக்கத் துவங்கியிருந்தது இந்தியா. இந்திய பெருமுதலாளிகள் தங்கள் சுரண்டல் முறையை தீவிரமாக்க உதவி யாக உலகமயமாக்கல் கொள்கைக ளை திணிக்க முனைந்தனர். நிரந்தர தொழிலாளர்களை குறைத்து ஒப்பந்த, தினக்கூலி முறையை அமல் படுத்தும் முயற்சிகளை அந்த நேரத்தில் நடந்த சிஐடியு மாநாடு அம்பலப்படுத்தியது. உலகமயம், தனியார்மயம், தாராளமய கொள்கை கள் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை கவலையுடன் சுட்டிக்காட்டியது. சிஐடியு சுட்டிக்காட்டியபடியே இன்று நிரந்தர தொழிலாளர்களின் எண் ணிக்கை படிப்படியாக குறைந்து, அரசுத்துறைகளிலும் வியா பித்துள்ளது.
நாட்டின் இதர பகுதிகளைப் போலவே குமரி மாவட்டத்திலும் உலக மயமாக்கலின் தீய விளைவுகள் உழைப்பாளி மக்களை நிர்க்கதி யாக்கி உள்ளது. ஏற்றுமதி இறக்கு மதி கொள்கைகளால் இம்மாவட்டத் தின் பாரம்பரிய தொழில்களான ரப்பர், முந்திரி நம்பிக்கையற்றதாக மாறியுள்ளன. மீன்பிடித் தொழில் பெரும் கார்ப்பரேட்டுகளின் கைக ளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உபரியாக்கப்பட்ட தொழில்படை கட்டு மானம் மற்றும் முறைசாரா தொழில்க ளை நம்பி எவ்வித பணி பாதுகாப்பும் இல்லா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். மறுபுறம் கற்றறிந்த இளம் தலை முறையினர் போதிய வேலைவாய்ப்பி ன்றி அவதிப்படும் நிலை ஏற் பட்டுள்ளது. இதுபோன்று தமிழக உழைப்பாளி மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்ச னைகளை விவாதித்து எதிர்கால சமூகத்திற்காக திட்டமிட நவம்பர் 4,5,6 தேதிகளில் சங்கமிக்கும் சிஐடியு தளபதிகளையும், சாதி, மத பிரிவினை களுக்கு தொழிலாளிகளை பலியாக்க அனுமதிக்க மாட்டோம், உரிமைகளை வென்றெடுப்போம் என முழக்கமிட்டு நாகர்கோவில் நகரில் நவம்பர் 6 இல் அணிவகுக்கவிருக்கும் தமிழக தொழி லாளி வர்க்கத்தினரையும் வரவேற்க தயாராகிவிட்டது குமரி மண். ஒன்றாய் சேருவோம், வென்றே தீருவோம்.