இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வடக்கு தேவதானம் ஊராட்சியை சிறந்த தூய்மை கிராமமாக தேர்வு செய்து சுகாதாரப் பராமரிப்பு பணிகளை திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார். ஊராட்சி மன்ற தலைவர், உதவி செயற் பொறியாளர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,உதவி பொறியாளர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகவூர் ஊராட்சி பாரதிநகர் சமுதாய கழிப்பறையை ஆய்வு செய்து மரக் கன்றுகள் நடப்பட்டது மேலும் தளவாய்புரம் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகள் அரவை மிஷின் நிறுவப்பட்டு பயன்பாடுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.