அருப்புக்கோட்டை, ஜூன்.19- அருப்புக்கோட்டை ஒன்றி யத்திற்கு உட்பட்டது பாளை யம்பட்டி முதல் நிலை ஊராட்சி. இங்குள்ள குடியிருப்புகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வரு கிறது. ஊராட்சி நிர்வாகம் ஒரு குழாய் இணைப்புக்கு ரூ.3,500 முதல் 5,500 வரை வீட்டு உரிமை யாளரிடம் வசூலித்து விட்டு ரூ.2 ஆயிரத்து 700க்கு மட்டும் வரவுச் வழங்கி வருகிறது. வசூலிக்கும் கட்டணத்திற்கு வரவுச் சீட்டு வழங்க வேண்டும். முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற் றுகை நடைபெற்றது. முத்திரு ளன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எம்.முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பூங்கோதை, பி.அன்புச்செல்வன், ஒன்றியச் செயலாளர் எம்.கணே சன், அருப்புக்கோட்டை நகர் செயலாளர் எஸ்.காத்த முத்து, லீலா வதி, சுப்பிரமணி, ராமலட்சுமி, காமாட்சி நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பெறப்பட்ட தொகைக்கு ஏற்ப ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி, துணைத் தலைவர் பாலா ஆகியோர் கை யொப்பமிட்டனர்.