districts

img

பழைய பேருந்து நிலையம் மார்ச் மாதம் திறக்கப்படும்

தூத்துக்குடி, ஜன.2 தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் வருகிற மார்ச் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளை நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய் தார். ஆய்வின்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறைஅமை ச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரி கள் உடன் சென்றனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியா ளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய பணி கள் தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள் ளது. இப்பணிகள் முழுமை யாக முடிந்ததும், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் மாநக ராட்சியிடம் ஒப்படைப்பதாக கூறியுள்ளனர். இப்பணிகள் தாமதம் அடைந்தால் மத்திய அரசின் நிதியைப் பெறுவ தில் சிக்கல் ஏற்படும் என்ப தால் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. எனவே மார்ச் முதல் வாரத்தில் பேருந்து நிலை யம் திறக்க திட்டமிடப்பட் டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்ப தற்கு தேதி கேட்போம், அதன் பின்னர் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும். மேலும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலை யத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிக ளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மாநக ராட்சியில் நிர்ணயம் செய் யப்படும் வாடகை கொடுக்க அவர்கள் முன்வந்தால் கடைகள் வழங்கப்படும் தமிழகம் முழுதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்ததாக கிடைத்த தகவலின் பேரில் இதற்காக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நிய மிக்கப்பட்டு 10 மாவட்டங்க ளில் விசாரணை நடத்தி வரு கிறார்.

அவரது அறிக்கை இன்னும் ஒரு சில வாரங்க ளில் கிடைக்கும். அதன் பின்பு இதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து கண் டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரி வித்தார். ஆய்வின் போது  மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெ கன் பெரியசாமி,  ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அதிகாரி கள் உடன் சென்றனர். முன்னதாக திருச்செந் தூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு திங்களன்று ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் நடை பெற்று வரும் திருச்செந்தூர் தோப்பூரில் உள்ள பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலை யத்தை அவர் பார்வை யிட்டார்.  பின்னர் பேருந்து  நிலையம் அருகே கட்டப் பட்டு வரும் மார்க்கெட்கட்டி டங்களையும்  பார்வையிட்டார். ஆய்வின் போது, அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சி யர் செந்தில்ராஜ், சண்முகை யா எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையா ளர் வேலவன் மற்றும் உட்பட  பலர் உடன் இருந்தனர்.